Header Ads



யாழ் - ஒஸ்மானியாக் அதிபர் வெற்றிட, விண்ணப்ப முடிவுத் திகதி நீடிப்பு

-பாறுக் ஷிஹான்-

யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி  அதிபர் வெற்றிடத்திற்காக  விண்ணப்ப முடிவுத்திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக வடக்குமாகாண கல்வியமைச்சின் செயலாளர்   இ. இரவீந்திரன்   அறிவித்துள்ளார்.

எதிர்வரும் (2017.08.26) தற்போதைய அதிபர் ஒய்வு பெறவுள்ளதை அடுத்து அதிபர் வெற்றிடம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய  வடக்குமாகாண கல்வியமைச்சின் செயலாளர் அவர்களினால் கடந்த 2017.07.19 ஆம் திகதிய  குடாநாட்டு  பத்திரிகையில் அதிபர் வெற்றிடத்திற்காக  விண்ணப்ப முடிவுத்திகதி  2017.08.02  ஆக  குறிப்பிடப்பட்டிருந்தது.

 எனினும் எதிர்பார்த்தளவில் விண்ணப்பத்தாரிகள் குறித்த அதிபர் பதவிற்கு விண்ணப்பிக்க தவறியதனால்  இவ்விண்ணப்ப  முடிவுத்திகதி  எதிர்வரும் 2017.08.10 ஆம் திகதி வரை நீடிப்புச் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இவ்வதிபர் பதவிக்கு வட மாகாணத்தில் கடமையாற்றும் இலங்கை கல்வி நிர்வாக சேவை 111 ஐச் (பொது ஆளணி) சேர்ந்த உத்தியோகத்தர்களிடமிருந்தும் இலங்கை அதிபர் சேவை 1இ2-1இமற்றும் 2-11 ஐச் சேர்ந்த உத்தியோகத்தர்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தது.

அடுத்து இலங்கை அதிபர் செவை வகுப்பு 1இ2-1இஐச் சேர்ந்த உத்தியோகத்தர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறாத சந்தர்ப்பங்களில் மாத்திரம் இலங்கையின் அதிபர் சேவை வகுப்பு 2-11 ஐச்  சேர்ந்தவர்கள் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட்டிருந்தது.

விண்ணப்பிக்க விரும்புவோர் வலயக் கல்வி அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று வலயக்கல்வி பணிப்பாளரின் சிபார்சுடன் 2017.08.02 ஆம் திகதிக்கு முன்னர் செயலாளர் கல்வி அமைச்சு வட மாகாணம் செம்மணி வீதி நல்லூர் யாழ்ப்பாணம் என்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்குமாறு கேட்கப்பட்டிருந்தது.

முக்கியமாக மேற்படி பாடசாலை பாரம்பரியமாக முஸ்லீம் சமூகத்தவர்களின் பாடசாலையாக இருப்பதனால் விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரிகளின் முஸ்லீம் சமூத்தைச் சேர்ந்தவர்களிற்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.