இலங்கையின் 'இந்நிலை' பாதுகாக்கப்பட வேண்டும் - துருக்கியின் முன்னாள் பிரதமர்
-ARA.Fareel-
இலங்கை பல்கலாசாரத்திற்கு மிகச் சிறந்த உதாரணங்களைக் கொண்ட நாடாகும். இலங்கையின் இந்த நிலையை நேரில் கண்டு நான் பெருமைப்பட்டேன். இந்த நிலை பாதுகாக்கப்பட்டு மேலும் கட்டியெழுப்பப்பட வேண்டும் என இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள துருக்கியின் முன்னாள் பிரதமர் பேராசிரியர் அஹ்மத் தாவுடொக்லு தெரிவித்தார்.
தேசிய ஐக்கியத்துக்கான பாக்கீர் மாக்கார் நிலையம் ஏற்பாடு செய்திருந்த 20 ஆவது வருட பாக்கீர் மாக்கார் நினைவுப் பேருரை நேற்று மாலை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் நினைவுப் பேருரை நிகழ்த்துகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தேசிய ஐக்கியத்துக்கான பாக்கீர் மாக்கார் நிலையத்தின் தலைவர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உட்பட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சமயத் தலைவர்கள், கல்விமான்கள், பாக்கீர் மாக்கார் குடும்ப உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர். இங்கு பேராசிரியர் தாவுடொக்லு தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,
'பல்கலாசாரம் சமாதானத்தின் அடிப்படை 'எனும் இந்தத் தலைப்பு இலங்கைக்கு மாத்திரமல்ல துருக்கிக்கும் முழு உலகுக்குமே பொருத்தமானதாகும். இலங்கைக்கு வருமாறு சகோதரர் இம்தியாஸ் பாக்கீர் மாக்காரிடமிருந்து எனக்கு அழைப்பு கிடைத்த போது உடனடியாகவே அந்த அழைப்பை ஏற்றுக் கொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறும் நான் எனது அணியினரை வேண்டிக் கொண்டேன். அதற்கு பல காரணங்கள் இருந்தன. அதிலொன்று கடந்த வருடம் நான் இலங்கைப் பிரதமரை டாவோஸில் சந்தித்த போது நான் விரைவில் இலங்கைக்கு வருவேன் என அவரிடம் உறுதி மொழி வழங்கியிருந்தேன். எனக்கு இலங்கையின் புவியியல் அமைவிடம் மீதும் இந்த நாட்டின் கலாசாரம், பாரம்பரியம் மீதும் விசேட ஆர்வம் இருப்பதும் மற்றொரு காரணமாகும்.
நான் இலங்கை வருவதெனத் தீர்மானித்த போது எனது மனைவியையும் பிள்ளைகளையும் பேரப் பிள்ளைகளையும் என்னுடன் வருமாறு அழைத்தேன். அதற்குக் காரணம் இலங்கையின் பல்கலாசாரம் தொடர்பில் அவர்கள் நேரில் கண்டறிந்து கொள்வதற்கான சிறந்த வாய்ப்பு இது என்பதனாலாகும். நாங்கள் கண்டிக்குச் சென்ற போது அங்கு இடம்பெற்ற பெரஹராவை குடும்பத்துடன் கண்டு களித்தோம். அதில் சிங்களவர்களினதும் தமிழர்களினதும் கலாசாரங்களைப் பிரதிபலிக்கும் பல நிகழ்வுகள் இடம்பெற்றன. இது பல்கலாசாரத்திற்கு நல்ல எடுத்துக்காட்டாகும்.
நான் கண்டிக்குச் சென்ற போது மல்வத்து மகாநாயக்க தேரரைச் சந்தித்துப் பேசினேன். நாங்கள் இருவரும் இஸ்லாம் தொடர்பிலும் பௌத்தம் தொடர்பிலும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம். நாம் நமக்கிடையே புதிய மனப்பாங்கையும் புதிய அணுகுமுறைகளையும் கட்டியெழுப்புவதற்கான சரியான நேரம் இது என நான் கருதுகிறேன். ஆனால் ஒரு கல்விமானாக , முன்னாள் பிரதமராக , முன்னாள் வெளிவிவகார அமைச்சராக இருந்தவன் என்ற வகையில் அதையெல்லாம் விட முக்கியமாக நான் ஒரு மனிதன் என்ற வகையில் நான் இந்த உலகத்தின் எதிர்காலம் குறித்து மிகவும் கவலைப்படுகிறேன்.
சமீபத்தில் சில முஸ்லிம் நாடுகள் எடுத்துள்ள தீர்மானங்கள், ஐரோப்பாவில் இஸ்லாமோபோபியா அதிகரித்து வருகின்றமை, மத குழுக்களிடையே தீவிரவாதப் போக்கு வளர்ந்து வருகின்றமை தொடர்பில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இவற்றால் வருகின்ற சவால்களை எதிர்கொள்ள நாம் நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
நான் இலங்கையில் தங்கியிருந்த இந்த நாட்களில் பல தொடர் சந்திப்புகளில் கலந்து கொண்டேன். குறிப்பாக சகல இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னணி ஊடகவியலாளர்களையும் இளைஞர் குழுவினரையும் தனித்தனியாக இன்று காலை சந்தித்தேன். குறிப்பாக இளைஞர்கள் குழுவில் முஸ்லிம்கள், சிங்களவர்கள், தமிழர்கள், கிறிஸ்தவர்கள் என சகல இனங்கள், மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பலர் இருந்தார்கள். அவர்களால் நான் மிகவும் கவரப்பட்டேன். நாம் மிகவும் சிறப்பான கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டோம். இலங்கை மிகவும் உறுதியான பல்கலாசாரத்தைக் கொண்டிருக்கிறது எனும் செய்தியை நான் இதன் மூலம் பெற்றுக் கொண்டேன்.
உலகில் பல்கலாசாரத்தை நான்கு வழிமுறைகள் மூலமாக கட்டியெழுப்ப முடியும் என நான் கருதுகிறேன். முதலாவது சமூக மட்டத்தில், இரண்டாவது தேசிய மட்டத்தில், மூன்றாவது பிராந்திய மட்டத்தில் , நான்காவது உலகளாவிய ரீதியில் என இதனை வகைப்படுத்த முடியும். அந்த வகையில் பல்கலாசாரமே சமாதானத்தின் அடிப்படை என நான் உறுதியாக நம்புகிறேன். நான் பிரதமராக இருந்த காலத்திலிருந்து இதனையே அடிக்கடி வலியுறுத்தி வருகிறேன்.
நான் கொழும்பில் பயணிக்கும் போது பௌத்த விகாரைகள், பள்ளிவாசல்கள், கோயில்கள், தேவாலயங்கள் என்பன மிக அருகருகே அமைந்திருப்பதை கண்டு பெருமைப்பட்டேன். இதுவே பல்கலாசாரத்தினதும் சமாதானத்தினதும் இரகசியமாகும். இந்த நிலை பாதுகாக்கப்பட வேண்டும். இந்த மரபு பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
pahalle parkumpothu alahahe irikkum pallihelil irevu ninru parungel, ungal thalaiyilum kal vilumpothu puriyum SRILANKA vin amaithiyum samathanemum
ReplyDeleteHe is a real Muslim and bring the teachings of Islam and teachings of Prophet Muhammad (PBUH) to the light. These are to be followed to maintain the brotherhood among multi cultured societies to restore peace. Good for all Srilankan.
ReplyDelete