A/L பரீட்சை வினாக்கள் வெளியான, குற்றச்சாட்டில் இருவர் கைது
கல்வி பொதுத் தராதரப் பத்திர உயர்தர பரீட்சை வினாக்கள் வெளியான குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர் என சந்தேகிக்கப்படும் மேலதிக வகுப்புகளை நடாத்தும் ஆசிரியர் ஒருவரின் சகோதரரும் அவரது தந்தையுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் குறித்த விடயம் தொடர்பான துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துள்ளதன் அடிப்படையிலேயே அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
Post a Comment