Header Ads



A/L பரீட்சை வினாத்தாள், முன்கூட்டி வெளியானதா? விசாரணைக்கு உத்தரவு

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் வெளியான குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் இரசாயன விஞ்ஞான பாட வினாத்தாளின் சில வினாக்கள் முன்கூட்டியே வெளியாகியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜே.புஸ்பகுமார கோரியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பரீட்சைத் திணைக்கள மட்டத்திலும் விசாரணை நடத்தப்பட உள்ளது.

முன்னோடி பரீட்சை வினாத்தாளில் உள்ளடக்கப்பட்ட சில வினாக்கள் இறுதிப் பரீட்சை வினாத்தாளின் வினாக்களுடன் ஒத்துப் போகும் வகையில் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.