Header Ads



சினிமா பாணியில் A/L பரீட்சை எழுதிய மாணவன் - CID வெளிப்படுத்திய திடுக்கிடும் தகவல்கள்.!

நாட்டில் தற்­போது நடைபெற்று வரும்  கல்விப் பொதுத் தரா­தர உயர்தரப் பரீட்­சை­களின் போது ஒரு  பரீட்சை மோச­டி பதி­வா­கி­யுள்­ளது. இந்த மோச­டி­, ஒப்­பந்த அடிப்­ப­டையில் ஆசி­ரி­யர்­க­ளையும் தொடர்புபடுத்தி முன்­னெ­டுக்­கப்பட்­டி­ருப்­பது தான் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­து­கின்­றது.

கடந்த 19 ஆம் திகதி சனிக்­கி­ழமை உயர் தரப் பரீட்­சையின் இர­சா­ய­ன­வியல் பாடத்­துக்­கான பரீட்­சைகள் இடம்­பெற்­றன. பகுதி 2 இற்­கான  பரீட்­சைகள் இவ்­வாறு இடம்­பெற்ற நிலையில் இர­சா­ய­ன­வியல் பகுதி 2 இன் மூன்று  கேள்­வி­களை உள்­ள­டக்­கிய துண்டுப்பிர­சு­ரங்கள் கம்­பஹா பகு­தியில் பிர­பல பெண்கள் பாட­சாலை ஒன்­றுக்கு முன்­பாக விநி­யோ­கிக்­கப்பட்­டுள்­ளன.

 இம்­முறை தான் அனு­மா­னித்த கேள்­விகள் பரீட்­சைக்கு வந்­துள்­ள­தா­கவும் எனவே வெற்­றியை உறுதி செய்ய தமது தனியார் கல்வி நிறு­வ­னத்தில் மேல­திக வகுப்­பு­க­ளுக்­காக மாண­வர்­களை அழைக்கும் வித­மா­கவே இந்த துண்டுப் பிர­சுரம் தயார் செய்­யப்பட்டு பரீட்­சையை எழு­தி­விட்டு வெளியில் வந்த மாண­வர்­க­ளுக்கு கொடுக்­கப்பட்­டுள்­ளது. அந்த துண்டுப் பிர­சு­ரத்தில் உயர்தரப் பரீட்­சையின் போது கேட்­கப்பட்­டி­ருந்த மூன்று பிர­தான வினாக்கள் அப்­ப­டியே அச்­சொட்­டாக உள்­ள­டக்­கப்பட்­டி­ருந்­தன. வினாக்கள் அப்­ப­டியே பரீட்சை வினாத் ­தாளிலிருந்­ததை அவ­தா­னித்­துள்ள மாண­வர்கள் அதிர்ச்­சி­ய­டைந்­துள்ள நிலையில் வினா பத்­திரம் ஏற்­க­னவே வெளி­யா­கி­விட்­டதா என்ற சந்­தே­கத்தில் பெற்­றோ­ருக்கு அறி­வித்­துள்­ளனர்.  அது தொடர்பில் பெற்றோர் ஊடாக பரீட்­சைகள் திணைக்­க­ளத்தின் கவ­னத்­துக்கு கொண்­டு­ வந்­துள்­ளனர். இந் நிலை­யி­லேயே பரீட்­சைகள் ஆணை­யாளர் விட­யத்தை  பொலிஸ் மா அதி­பரின் கவ­னத்­துக்கு கொண்­டு­வந்­துள்ளார்.

 இத­னை­ய­டுத்து கம்­பஹா பகு­தியில்  துண்டுப் பிர­சு­ரங்கள் விநி­யோ­கிக்­கப்பட்­டதால் விசா­ர­ணைகள் கம்­பஹா சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சகர் முதித்த புசல்­ல­விடம் கைய­ளிக்­கப்­பட்­டது. சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சகர் முதித்த புசல்­லவின் கீழ் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ஸ்ரீ லால் பெரேரா தலை­மை­யி­லான பொலிஸ் குழு முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களில் பரீட்­சைக்கு முன்னர் வினாத்தாள் வெளி­யா­க­வில்லை என்­பது தெரி­ய­வந்­தது. எனினும் பரீட்­சையின் இடை நடுவே யாரோ ஒருவர் அந்த கேள்­வி­களை மேல­திக வகுப்பு ஆசி­ரியர் ஒரு­வ­ருக்கு ஏதோ ஒரு வகையில் வழங்­கி­யுள்ளார் என்­பதை பொலிஸார் கண்­ட­றிந்­தனர்.

 இத­னை­ய­டுத்து அது தொடர்பில் தீவிர விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்த பொலிஸார் குறித்த துண்டுப் பிர­சுரத்தை விநி­யோ­கித்­த­தாக கூறப்­படும் கந்­தான, பட்­ட­கம பகு­தியைச் சேர்ந்த இரு­வரை முதலில் கைது செய்­தனர்.

 துண்டுப்பிர­சு­ரத்தில் குறிப்­பி­டப்பட்­டி­ருந்த இர­சா­ய­ன­வியல் மேல­திக வகுப்பு ஆசி­ரி­யரின் 67 வய­தான தந்­தையும் 29 வய­தான சகோ­த­ர­ருமே இவ்­வாறு பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்­டனர்.  குறித்த இரு­வ­ரி­டமும் கம்­பஹா உதவி பொலிஸ் அத்­தி­யட்சகர் ஸ்ரீ லால் பெரேரா தலை­மை­யி­லான பொலிஸ் குழு முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்பட்ட தக­வல்­க­ளுக்கு அமைய கம்­பஹா - பண்­டா­ர­நா­யக்க மாவத்தை பகு­தியில் அச்­சகம் ஒன்­றினை நடத்தும் 42 வய­தான நபர் ஒரு­வரை, குறித்த  துண்டுப்பிர­சு­ரங்­களை அச்­சிட்­டமை தொடர்பில் பொலிஸார் கைது செய்­தனர்.

இம் ­மூ­வ­ரி­டமும் விசா­ரணை செய்­ததில் பல அதிர்ச்­சிகள் வெளியே வந்த நிலையில், இந்த மோச­டியின் பின்­ன­ணியில் 10 இலட்சம் ரூபா ஒப்­பந்தம் ஒன்று உள்­ள­மையும், பரீட்­சையின் இடை நடுவே கொழும்பு பிர­பல பாட­சாலை மாணவன் ஒருவன் ஊடா­கவே பரீட்சை வினாத் தாள் வெளியில் வந்­துள்­ள­மையும்  கண்­ட­றி­யப்­பட்­டது.

இத­னை­ய­டுத்து இந்த மோச­டியின் அனைத்து விட­யங்­க­ளையும் வெளிப்­ப­டுத்தி ­கொள்ளும் பொறுப்பு குற்றப் புல­ன­ய்வு பிரி­வுக்கு பாரப்­ப­டுத்­தப்பட்­டது. குற்றப் புல­னா­ய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி சென­வி­ரத்ன, அதன் பணிப்­பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுதத்  நாக­ஹ­முல்ல ஆகி­யோரின்  மேற்­பார்­வையில் இந்த விசா­ர­ணைகள் இடம்­பெற்­றன. 

பிர­பல குற்ற விசா­ர­ணை­யா­ள­ரான குற்றப் புல­னாய்வுப் பிரிவின் பிரதிப் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சகர் ஷானி அபே­சே­க­ரவின் கட்­டுப்­பாட்டில் விசேட விசா­ரணைப் பிரி­வி­னரால் இந்த விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்பட்­டன.

இதன் போது முதலில் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் நார­ஹேன்­பிட்டி பொலிஸ் வைத்­தி­ய­சா­லையின் பல் வைத்­தி­ய­ரையும் அவ­ரது மக­னையும் கைது செய்­தனர். காரணம், குறித்த வைத்­தி­யரின் மகனே வினாப் பத்­தி­ரத்தை வெளியே கசிய விட்­ட­வ­ராவார். அத்­துடன் தனது மக­னுக்கு விடை சொல்லி கொடுக்க மேல­திக வகுப்பு ஆசி­ரி­ய­ருக்கு 10 இலட்சம் ரூபா­வினை வைத்­தியர் செலுத்­தி­யுள்ளார் என்­பதும் விசா­ர­ணையில் தெரி­ய­வ­ரவே அவரும் உட­ன­டி­யாக கைது செய்­யப்பட்­டி­ருந்தார்.

 இந்த கைது­களின் பின்னர் இடம்­பெற்ற விசா­ர­ணை­களில் வெளி­ப்ப­டுத்­தப்பட்ட தக­வல்­களே மிஷன் இம்­பொ­ஷிபல் பாணி  மோசடி நட­வ­டிக்­கை­களை அம்­ப­லப்­ப­டுத்­து­வ­தாக அமைந்­தது.

ஆம், கமல் ( பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது) கொழும்பு பிர­பல பாட­சாலை உயர் தர விஞ்­ஞான மாணவன். தொழில் நுட்ப விட­யங்­களில் திறமை வாய்ந்த அவ­னுக்கு, அவ­னது திறமை கார­ண­மாக கன­டாவில் புலமைப் பரிசில் ஒன்று கூட கிடைத்­துள்­ளதாம். எனினும் கமலின் தந்­தை­யான பொலிஸ் வைத்­தி­ய­சா­லையின் பல் வைத்­தி­ய­ருக்கு தனது மகன் வைத்­தியர் ஆக வேண்டும் என ஆசை.

 இத­னாலோ என்­னவோ கமலை  உயர் தரத்தில் விஞ்­ஞான பிரிவில் கல்வி கற்கச் செய்­துள்ளார். இந் நிலை­யி­லேயே அப்­பி­ரிவில் கல்வி கற்று பரீட்­சைக்கு தோற்­றிய கமல் தனக்கு தெரிந்த தொழில் நுட்ப அறி­வினை பயன்­ப­டுத்தி மோசடி செய்து பரீட்சை எழு­தவும் தயங்­க­வில்லை. காரணம் எப்­ப­டி­யேனும் வைத்­தி­ய­ரா­கி­ விட வேண்டும் என்ற தந்தை, மோசடி செய்­யவும் உறு­து­ணை­யாக இருந்­த­மையே.

  குற்றப் புல­ன­ாய்வுப் பிரி­வி­னரால் இது­வ­ரை­யி­லான விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள  தக­வல்­க­ளுக்கு அமைய விட­யங்­களை நாம் தரு­கின்றோம்.

கமல் உயர்தரப் பரீட்­சையில் எப்­ப­டி­யேனும் சித்­தி­ய­டைய வேண்டும் என்­ப­தற்­காக பாரிய திட்டம் வகுக்­கப்பட்­டுள்­ளது. இந்த திட்­ட­மா­னது பொரளை கொட்டா வீதியில் உள்ள பொலிஸ் வைத்­தி­ய­சாலை வைத்­தி­யரின் மாடி வீட்­டி­லேயே தீட்­டப்பட்­டுள்­ளது. முதலில் பரீட்­சைக்கு விடை­ய­ளிக்க கமல் தனது தொழில் நுட்ப அறிவை பயன்­ப­டுத்தி கரு­வி­களை கொள்­வ­னவு செய்யும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்ளார். அதன்­படி இணையம் ஊடாக சிறிய ஸ்கேனிங் கெமரா, புளூடூத் உப­க­ரணம் உள்­ளிட்­ட­வற்றை கமல் சீனாவில் இருந்து கொள்­வ­னவு செய்­துள்ளார். அதன் பெறு­மதி 900 அமெ­ரிக்க டொலர்கள் என அறிய முடி­கின்­றது. இதற்­கான பணம் தந்­தை­யான பொலிஸ் வைத்­தி­ய­சாலை வைத்­தி­யரின் பெயரில் உள்ள கடன் அட்­டை­யினால் செலுத்­தப்பட்­டுள்­ளது.

குறித்த கெமரா சிறிய கெம­ரா­வாகும். பாட­சாலை சீரு­டையின் பொத்தான் போன்று உள்ள அந்த கெம­ராவை, பொத்­தா­னாக பயன்­ப­டுத்­தியே கமல் மோச­டியில் ஈடு­பட்­டுள்ளார். அந்த கம­ராவை இயக்கும் சுவிட்ச் காலில் சப்­பாத்­தினுள் சூட்­சு­ம­மாக மறைத்து வைக்க முடி­யு­மா­னது. அந்த சுவிட்ச்­களை விரல்­க­ளினால் இயக்கும் போது பொத்தான் வடிவில் உள்ள கமரா வினா­பத்­தி­ரத்தை பட­மெ­டுத்து, மற்­றொரு சுவிட்ச்சை அழுத்தும் போது மெசஞ்ஞர் ஊடாக கமலின் பேஸ் புக் உள் பெட்­டிக்கு செல்ல முடி­யு­மா­ன­தாக வடி­வ­மைக்­கப்பட்­டுள்­ளது. 

அதன் பின்னர் கமலின் பொரளை வீட்டில் இருக்கும் மேல­திக வகுப்பு ஆசி­ரியர் வினா­க்­களை பார்த்­து­ விட்டு, விடையை மெசஞ்ஞர் அழைப்பு ஊடாக கம­லுக்கு சொல்லி கொடுத்­துள்ளார். மெசஞ்ஞர் அழைப்பு ஏற்­ப­டுத்தி பதிலை சொல்லிக் கொடுக்கும் போது அதனை கிர­கிப்­ப­தற்­கான புளூடூத் உப­க­ரணம் கமலின் காது­க­ளுக்குள் இருந்­துள்­ளது. இதுவும் யாரும் கண்­ட­றிய முடி­யா­த­தான, காந்தம் கொண்ட கடி­கார மின்­க­லன்­களின் அள­வினை கொண்ட புளூடூத் உப­க­ர­ண­மாகும்.

இந்த தொழில் நுட்­பங்கள் ஊடாக கமல் ஏற்­க­னவே உயி­ரியல் பாடத்­துக்கும் விடை எழு­தி­யுள்ள போதும் அவன் சிக்­க­வில்லை. அதற்­காக உயி­ரியல் பாட மேல­திக ஆசி­ரியர் ஒருவர் விடை­யினை சொல்லிக் கொடுத்­துள்ளார். அதன் பின்னர் இர­சா­ய­ன­வியல் பரீட்­சையின் போதும் இதே பாணியில் விடை எழு­தி­யுள்ளார். அதன் போதும் சிக்­க­வில்லை. எனினும் அந்த வினாப்பத்­தி­ரத்­துக்கு விடை சொல்லிக் கொடுத்த ஆசி­ரியர் மேல­திக பண மோகத்தில் வடி­வ­மைத்த துண்டுப் பிர­சு­ரத்­தினால் பொலிஸார் முன்­னெ­டுத்த விசா­ர­ணை­க­ளி­லேயே இவை­ய­னைத்தும் மாட்டி வெளிப்­ப­டுத்­தப்பட்­டுள்­ளன.

 இதில் இன்­னொரு விடயம் என்­ன­வென்றால் பரீட்­சைக்கு முன்னர் இந்த மோசடி தொடர்பில் ஒத்­தி­கையும் பார்க்­கப்பட்­டுள்­ளது. பொரளை கொட்டா வீதியில் உள்ள கமலின் வீட்டில் மேல் மாடியில் கமல் மாதிரி வினா­ப் பத்­திரம் ஒன்­றுக்கு விடை­ய­ளிக்கும் போது இதே தொழில் நுட்­பத்தில் மாதிரி வினாப் பத்திரம் ஒன்றுக்கு விடையளிக்கும் போது இதே தொழில் நுட்பத்தில் கீழ் மாடியில் இருந்து ஆசிரியர்கள் விடை சொல்லிக் கொடுத்து இந்த ஒத்திகை பார்க்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

 இந் நிலையில் தற்போது, கமலுக்கு உதவிய அல்லது ஒப்பந்த அடிப்படையில் உதவிய மேலதிக வகுப்பு ஆசிரியர்கள் இருவரையும் கைது செய்ய குற்றப் புலனாய்வுப் பிரிவு சிறப்பு பொலிஸ் குழு ஒன்று கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இந் நிலையில் நேற்று சட்டத்தரணியூ டாக இரசாயனவியல் ஆசிரியர் கம்பஹா நீதிமன்றில் சரணடைந்தார். இதன்போது அவரையும் நாளை வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த பரீட்சை மோசடி தொடர்பில், இரசாயனவியல் மேலதிக வகுப்பு ஆசிரியருக்கு 10 இலட்சம் ரூபா பணம் வழங்கப்பட்டுள்ள நிலையில் அதில் 9 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவுக்கும் அதிகமான தொகையை அவரது வீட்டில் இருந்து பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இதுவரை இரசாயன வியல் ஆசிரியருக்கு மேலதிகமாக அவரது தந்தை, சகோதரர், கம்பஹா அச்சக உரிமையாளர், கமல் மற்றும் கமலின் தந்தையான வைத்தியர் ஆகியோர் கைது செய்யப்பட்டு நாளை 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந் நிலையில் உயிரியல் ஆசிரியரை தேடிய வேட்டையை புலனாய்வுப் பிரிவினர் முன் னெடுத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.