Header Ads



பரீட்சை முடிந்ததை கொண்டாடிய, மாணவர்களின் படகே கவிழ்ந்தது - சடலங்கள் மீட்பு


யாழ். மண்டைத்தீவு கடற்பரப்பில் பயணம் செய்த படகு கவிழ்ந்ததில் 6 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அதேவேளை, ஒருவர் உயிர்தப்பி உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த மாணவர்களின் சடலங்கள் தற்போது, யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

இன்று கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பிரதான பாடங்கள் நிறைவடைந்த நிலையில், குறித்த மாணவர்கள் படகு சவாரி செய்யமுற்பட்டபோது படகு கவிழ்ந்ததில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

உயிரிழந்த மாணவர்கள் யாழ்.கொக்குவில், நல்லூர், உரும்பிராய் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இறந்தவர்களின் பெயர் விபரங்கள் வருமாறு, நந்தன் ரஜீவன் (உரும்பிராய் ) 18 , நாகசிலோஜன் சின்னதம்பி (உரும்பிராய்) 17 , தனுரதன் (கொக்குவில்) 20 , பிரவீன் (நல்லூர்) 20 ,தினேஷ் (உரும்பிராய்) 17 ,தனுசன் (சண்டிலிப்பாய்) 18

No comments

Powered by Blogger.