Header Ads



லசித் மலிங்கவின் ஆலோசனையில், இலங்கையின் 5 விக்கெட்டுக்களை அள்ளிய தபும்ரா


லசித் மலிங்கா ஐபிஎல் போட்டியின் போது கொடுத்த பந்துவீச்சு ஆலோசனைகள் தனக்கு உதவியாக இருந்தது என இந்திய வீரர் பும்ரா கூறியுள்ளார்.

இலங்கை - இந்தியா இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இது குறித்து பும்ரா கூறுகையில், இலங்கையில் இதற்கு முன் நான் விளையாடாத நிலையில், சூழல் குறித்து தெரியாமல் முதல் முறையாக பந்து வீசினேன்.

இது தொடர்பாக சீனியர்களிடம் நான் கேட்ட ஆலோசனைகள் உதவியாக இருந்தது. ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணி வீரர் லசித் மலிங்கா எனக்கு நிறைய ஆலோசனைகள் கூறுவார்.

கடந்த சில ஆண்டுகளாக அவரிடம் நான் கற்றுக்கொண்ட விடயங்கள் எனக்கு பெரிதும் உதவியது.

பந்துவீச்சாளர்கள் ஏதாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்பதே எனது நோக்கமாகும்.

இவ்வாறு பும்ரா கூறியுள்ளார்.

1 comment:

  1. இதனை தானே இந்திய அணி எதிர்பார்த்தது... இந்த IPL தான் இலங்கை உட்பட ஏனைய அணிகளின் வீழ்ச்சிக்கு காரணம்... இதுவும் ஒரு வகையில் தேச துரோகம் தான்... IPL போட்டிகளில் தனது சக நாட்டு வீரர்களின் பலவீனங்களை அவர்களுக்கு சொல்லி கொடுப்பது என்னைப் பொறுத்தவரை தேச துரோகம்... பணத்திற்காக நாட்டை காட்டி கொடுக்கும் இந்த IPLஐ இலங்கை வீரர்களுக்கு தடை செய்யப்பட்ட வேண்டும்...

    ReplyDelete

Powered by Blogger.