Header Ads



பாணந்துறையில் 30 நிமி­டங்­க­ளில் 5 படுக்­கை­ய­றை­களில் நுழைந்து தப்பிச்சென்ற நிர்வாண மனிதன்

பாணந்­துறை, பிங்­வத்த பிர­தே­சத் தில் நேற்று முன்­தினம் இரவு  வீடு­க­ளுக் குள் புகுந்த நிர்­வாண நபரால் பிர­தேச மக்கள் பீதி­ய­டைந்­த­தாக பாணந்­துறை பிர­தேச சபையின் முன்னாள் உறுப்­பி­ன­ரான நிமல் குசு­ம­சிறி சில்வா தெரி­வித்­துள்ளார்.

இந்த மர்ம நபர் நிர்­வா­ண­மாக 30 நிமி­டங்­க­ளுக்குள் பிங்­வத்த பிர­தே­சத்­தி­லுள்ள ஐந்து வீடு­களுள் நுழைந்து படுக்­கை­ய­றை­களில் பதுங்­கி­யி­ருந்­த­தாக பிர­தே­ச­வா­சிகள் தெரி­வித்­துள்­ளனர்.

இதனல் பெரிதும் பீதி­ய­டைந்த வீட்டார் கூச்­ச­லிட்டு பிர­தே­ச­வா­சி­க­ளுடன் ஒன்­றி­ணைந்து அந்­ந­பரை பிடிக்க முயற்­சித்த போதிலும் அம் மர்ம மனிதன் தப்பிச் சென்­ற­தாக தெரி­வித்­துள்­ளனர்.

இத­னை­ய­டுத்து, சம்­ப­வத்­துக்கு முகங்­கொ­டுத்த பிர­தே­ச­வா­சிகள் இது தொடர்பில் பிர­தே­ச­சபை முன்னாள் உறுப்­பி­ன­ருக்கு தெரி­யப்­ப­டுத்­தி­ய­துடன் அவ­ரி­னூ­டாக  119 அவ­சர பொலிஸ் பிரி­வுக்கு அறி­வித்­துள்­ளனர். பின்னர் இவ்­வி­டயம் தொடர்பில் பிங்­வத்த பொலிஸ் காவல ரணுக்கும் அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

இந்த மர்ம நபரை பிர­தே­ச­வா­சிகள் அனை­வரும் ஒன்­றி­ணைந்து மடக்­கி­பி­டிக்க முயற்­சித்த போதிலும் அவர் மாய­மாக மறைந்­தி­ருந்­தமை பெரும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த நிர்­வாண நபர், வீட்டில் கண­வன்மார் இல்­லா­தி­ருந்த வீடு­களை குறி­வைத்து நுழைந்­தி­ருந்­த­தா­கவும், அவ்­வாறு அந்­நபர் நுழைந்த வீடொன்றில் கத்­தி­யொன்­றையும், மற்­றொரு வீட்டில் துணி­யொன்­றையும் விட்டு சென்­றி­ருந்­த­தாக பாணந்­துறை பிர­தேச சபையின் முன்னாள் உறுப்­பி­ன­ரான நிமல் குசுமசிறி சில்வா தெரிவித்துள்ளர்.

இந்நபர் தொடர்பில் தகவல்கள் தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.