20 ஆவது திருத்தம் மூலம், மாகாண தேர்தல்களை ஒத்திவைக்க சதி - சிவில் அமைப்புக்கள் எதிர்ப்பு
மாகாண சபைத் தேர்தல்களை மீண்டும் ஒத்திவைப்பதற்காக அரசு 20ஆவது அரசமைப்பு சட்டமூலத்தை மாற்ற முயற்சித்தால் அதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்போவதாக முன்னணி தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளும், சிவில் அமைப்புகளும் எச்சரிக்கை விடுத்துள்ளன.
சகல மாகாண சபைத் தேர்தல்களையும் ஒரே தினத்தில் நடத்துவதற்கு எவராலும் எதிர்ப்புத் தெரிவிக்க முடியாது. எனினும், அந்தக் காரணத்தை முன்வைத்து பதவிக்காலம் முடிவடையும் மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திவைக்க முடியாது.
20ஆவது அரசமைப்பு சட்டமூலத்தில் மாற்றம் செய்ய முயல்வதன் மூலம் அரசு மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைப்பது ஜனநாயகத்துக்கு விரோதமான செயல். அரசு அத்தகைய முயற்சியொன்றை மேற்கொண்டால் தாங்கள் சட்ட நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டி வரும் எனவும் அந்த அமைப்புகள் எச்சரித்துள்ளன.
Post a Comment