2 வருடங்களில் 2000 பொலிஸ், அதிகாரிகளுக்கு எதிராக முறைப்பாடு
பொலிஸ் சேவையிலுள்ள 2000 த்துக்கும் அதிகமான பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக 2016 முதல் 2017 வரையான காலப் பகுதியில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
முறைப்பாடுகளை முறையாக விசாரணை செய்யாமை, முறைப்பாடுகளை விசாரணை செய்யும்போது ஒரு தரப்புக்கு ஆதரவாக நடந்து கொண்டமை, பொலிஸ் தாக்குதல் ஆகியனவும் இம்முறைப்பாடுகளில் அடங்கியுள்ளன என்ற அந்த ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதற்கு மேலாக பொலிஸ் அதிகாரிகளால், பொலிஸ் அதிகாரிகளுக்கு இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பாகவும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இந்த முறைப்பாடுகளில் சுமார் 1000 முறைப்பாடுகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். 2016 ஆம் ஆண்டு மாத்திரம் 1879 பொலிஸாருக்கு எதிரான முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.
Post a Comment