அரசாங்கத்தின் வருமானம், 14,240 மில்லியன் ரூபாவினால் வீழ்ச்சி
அரசாங்கத்தின் வருமானம், இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. அமைச்சர் கயந்த கருணாதிலக நாடாளுமன்றத்தில் நேற்று இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் 2017 ஆண்டின் முதல் அரை ஆண்டு நிதி நிலைமை தொடர்பாக அமைச்சர் கயந்த கருணாதிலக நாடாளுமன்றத்தில் நேற்று அதிகாரபூர்வ தகவல்களை வெளியிட்டார்.
இதற்கமைய, இந்த ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், இரண்டாவது காலாண்டில் சிறிலங்கா அரசாங்கத்தின் வருமானம், 14,240 மில்லியன் ரூபாவினால் வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் காலாண்டில், அரசாங்கத்தின் வருமான 445,250 மில்லியன் ரூபாவாக இருந்தது.
இது இரண்டாவது காலாண்டில், 431,010 மில்லியன் ரூபாவாக குறைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment