Header Ads



தென்கிழக்கு பல்கலைக்கழக 13 மாணவர்களுக்கு தடை

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து 13 மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் ஆகிய பீடங்களுக்கு காலவரையறையற்ற விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இந்த பீடங்களின் மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எம்.என்.நாஜீம் குறிப்பிட்டார்.

பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு தொழில்நுட்பப்பிரிவு மாணவர்களுக்கும் இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு பொறியியல் பிரிவு மாணவர்களுக்கும் இடையே இன்று முற்பகல் மோதல் இடம்பெற்றதாக பொலிஸார் கூறினர்.

இந்த சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

No comments

Powered by Blogger.