Header Ads



IS பயங்கரவாதத்துக்கு உதவும் நபர்கள், பாராளுமன்றத்திற்குள்ளும் இருக்கின்றனர்

“ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினருக்கு முகம்கொடுக்கும் அளவுக்கு, இலங்கைக்கு சக்தி இல்லை என்பதால், இதுவிடயம் குறித்து அமெரிக்க, இந்தியா மற்றும் ரஷ்யாவுடன், அரசாங்கம் பாதுகாப்பு உடன்படிக்கைகளை செய்துகொள்ள வேண்டும்” என, பொதுபல சேனா அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டிலாந்த வித்தானகே தெரிவித்தார்.

மேலும், “ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதத்துக்கு உதவும் நபர்கள், அமைச்சரவைக்குள்ளும் நாடாளுமன்றத்துக்குள்ளும் இருக்கின்றனர்” எனவும் அவர் தெரிவித்தார்.

பொதுபல சேனா செயலகத்தில் இன்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.