Header Ads



முஸ்லிம்களை கட்டாயம் வாக்காளர் இடாப்பில், பதிவு செய்யுமாறு கோரிக்கை

18 வய­துக்கு மேற்­பட்ட இலங்கை முஸ்­லிம்கள் அனை­வரும் இம்­முறை வாக்­காளர் இடாப்பில் கட்­டாயம் தங்கள் பெயர்­களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்­ன­ணிகள் சம்­மே­ளனம் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

இது குறித்து அச் சம்­மே­ள­னத்தின் தேசிய தலைவர் பீ.எம். பாருக் வேண்­டுகோள் விடுத்­துள்ளார். அவ்­வ­றிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, 

வாக்­காளர் இடாப்பில் பெயர்­க­ளைப்­ப­திவு செய்­வது தேர்­தலில் வாக்­க­ளிப்­ப­தற்கு மாத்­தி­ர­மல்ல நாம் இந்­நாட்டுப் பிர­ஜை­க­ளென்று உறு­திப்­ப­டுத்தும் ஆவ­ண­மா­கவும் அது அமை­கி­றது. அர­சாங்க உத்­தி­யோகம் மற்றும் தனியார் உத்­தி­யோகம் முதல் அர­சாங்­கத்­துடன் தொடர்­பு­டைய சகல தேவை­க­ளுக்கும் கிரா­ம­சே­வகர் அத்­தாட்சி அவ­சி­ய­மா­கி­றது.

இதற்கு தமது பெயர் வாக்­காளர் இடாப்பில் பதி­யப்­பட்­டி­ருக்க வேண்டும். இலங்கை முஸ்­லிம்கள் பல சவால்­களை மேற் கொண்­டுள்ள இக்­கால கட்­டத்தில் நாம் இலங்கை பிர­ஜைகள் என்று நிரூ­பிப்­ப­தற்­காக இப்­ப­திவு மிக­மிக முக்­கி­ய­மா­னது. அது எமது உரி­மையும் கூட.

சில பெற்­றோர்கள் தமது பிள்­ளைகள் திரு­மணம் முடித்துச் சென்­றாலும், வெளி­நாடு சென்­றாலும் அவர்­க­ளது பெயர்­களைப் பதி­யாது இருந்­து­வி­டு­வ­தாக அறி­கிறோம்.

இது தவ­றா­னது இவ்­வாறு செய்தால் அவர்­களின் பெயர்கள் எந்த இடத்­திலும் பதிவு செய்­யப்­ப­டு­வ­தில்லை. அதே போன்று தாம் வசிக்கும் பகு­தி­யி­லி­ருந்து வேறு பகு­தி­க­ளுக்குச் சென்­றாலும் கவ­ன­யீ­ன­மாகத் தமது பெயர்­களைப் பதிவு செய்­வ­தில்லை. இத­னாலும் இரண்டு இடங்­க­ளிலும் அவர்கள் பதிவை இழக்­கின்­றார்கள்.

தாம் திரு­மணம் முடித்துச் சென்­றாலோ வேறு பகு­தி­க­ளுக்குச் சென்­றாலோ பதிவை மாற்­று­வ­தற்கு பல விதி முறைகள் உள்­ளன. அவர்கள் முன்­னைய இடத்தில் பதிவு செய்­யப்­ப­ட­வில்லை என்று அப்­ப­குதி கிராம உத்­தி­யோ­கத்­த­ரிடம் அத்­தாட்­சிப்­ப­டுத்தி தற்­போது வசிக்கும் பகுதி கிராம உத்­தி­யோ­கத்­த­ருக்குக் கொடுத்து பதிவை மேற்­கொள்ள வேண்டும்.

இவற்றை செய்­வ­தற்கு கால அவ­காசம் போதா­மை­யினால் யாரேனும் பெற்­றோர்கள் திரு­மணம் முடித்த அல்­லது வெளி­நாடு சென்ற பிள்­ளை­களின் விப­ரங்­களை அகற்றிப் படி­வத்தைக் கைய­ளித்­தி­ருந்தால் உட­ன­டி­யாகத் தமது கிராம உத்­தி­யோ­கத்­தரை சந்­தித்து அப்­பெ­யர்­களை மீண்டும் உட்­ப­டுத்­திக்­கொள்ள ஏற்­பாடு செய்ய வேண்டும்.

இது விட­ய­மாக அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்­னணி­களின் மாவட்ட சம்­மே­ள­னங்­களை தமது மாவட்­டத்­தி­லுள்ள பள்­ளி­வா­சல்­களின் நம்­பிக்­கை­யாளர் சபை மூல­மாக மக்­களைத் தெளி­வு­ப­டுத்தி ஆவன செய்ய வேண்டும் என்று பணிக்­கப்­பட்­டுள்­ளார்கள்.

அதேபோன்று பள்ளிவாசல் நிர்வாகிகளும் சமூக செயற்பாட்டாளர்களும் இவ்விடயத்தில் முக்கிய கவனம் செலுத்தி சகல ஜமாஅத்தார்களினதும் பதிவை உறுதி செய்வதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவ்வறிக்கையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.