Header Ads



முஸ்லிம்களுக்காக குரல் கொடுப்பதால், பொதுபல சேனா என்னை கொலைசெய்ய முயற்சி

-ARA.Fareel-

ஜாதிக பல­சே­னாவின் செய­லாளர் வட்­ட­ரக்க விஜித தேரர் பொது­ப­ல­சேனா அமைப்பின் தாக்­கு­தல்­க­ளி­லி­ருந்தும் தனக்கு பாது­காப்பு வழங்­கு­மாறு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் விடுத்த கோரிக்கை ஏற்றுக் கொள்­ளப்­பட்­டுள்­ளது.

வட்­ட­ரக்க விஜித தேரர் ஜ-னா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் செய்­துள்ள முறைப்­பா­டுகள் தொடர்பில் பொலிஸ் மா அதி­ப­ரிடம் அறிக்­கை­யொன்­றினைப் பெற்றுக் கொண்டு ஒரு­வார காலத்தில் பாது­காப்­புக்­கான ஏற்­பா­டு­களைச் செய்­வ­தாக ஜனா­தி­ப­தியின் இணைப்புச் செய­லாளர் ரஜித கொடி­து­வக்கு உறுதி வழங்­கி­யுள்ளார்.

முஸ்லிம் சமூ­கத்தின் நியா­யங்­க­ளுக்­காக தான் குரல் கொடுப்­பதால் பொது­ப­ல­சேனா அமைப்பு தன்னை கொலை செய்ய முயற்­சிப்­ப­தா­கவும் எனவே தனக்கு பாது­காப்பு வழங்­கப்­பட வேண்டும்.

அத்­தோடு மஹி­யங்­கனை ஸ்ரீல.சு. கட்­சியின் அமைப்­ப­ள­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ள நபர் பல்­வேறு குற்றச் செயல்­க­ளுடன் தொடர்­பு­பட்­டவர் அவர் பொது­ப­ல­சே­னாவின் செயற்­பாட்­டா­ள­ரென்றும் அவரை அப்­ப­த­வி­யி­லி­ருந்து நீக்­கு­மாறு கோரி­யுமே வட்­ட­ரக்க விஜித தேரர் பொலிஸ் மா அதிபர், ஜனா­தி­பதி ஆகி­யோ­ருக்கு முறை­யிட்­டி­ருந்தார்.

முறை­யிட்டு நீண்ட நாட்­க­ளா­கியும் நட­வ­டிக்கை எதுவும் எடுக்­கப்­ப­டாத நிலை­யி­லேயே அவர் கடந்த புதன்­கி­ழமை ஜனா­தி­ப­தியை நேரில் சந்­திக்க ஜனாதிபதியின் செயலகத்துக்குச் சென்றிருந்தார். அச்சந்தர்ப்பத்திலேயே ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளரினால் உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.