Header Ads



லசித் மீதான தடை, எனக்கு உடன்பாடில்லை - மஹேல

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவிற்கு விதிக்கப்பட்ட போட்டித் தடை உத்தரவில் தனக்கு உடன்பாடு இல்லை என, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

அனுமதியின்றி ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டமை தொடர்பில் லசித் மாலிங்கவிற்கு விதிக்கப்பட்ட போட்டித் தடை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

முன்னாள் தலைவர் மஹேலவின் டுவிட்டர் தளத்தில் இந்த போட்டித் தடைக் குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன? என்று நபர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த கேள்விக்கு பதில் பதிவிட்டுள்ள மஹெல இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

லசித் மாலிங்க அனுமதியின்றி ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டில், மூவர் அடங்கிய விசாரைணைக் குழுவின் பரிந்துரைக்கு அமைய, அவருக்கு 6 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒருவருட கால இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.