Header Ads



"முஸ்லிமாக இருந்துகொண்டு, இன்னொரு முஸ்லிம் மீது வீண்பழி சுமத்தாதீர்கள்"

வவுனியா ஆண்டியாபுளியங்குளத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப்  ஹக்கீம் சின்னச்சிப்பிக்குளம் பள்ளி நிர்வாக சபை தொடர்பில் தெரிவித்த மலினமான கருத்துத் தொடர்பில் பள்ளி நிர்வாகம் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு கடிதமொன்றை எழுதியுள்ளது. பள்ளி பரிபாலனசபைத் தலைவர் டி.எம்.இம்தியாஸ் அவர்களினால் எழுதியுள்ள அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது.

சின்னச்சிப்பிக்குளம் ஜூம்ஆப்பள்ளிவாசல் தொடர்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் கருத்துக் குறித்து நிர்வாக சபையின் விளக்கம்.

12.07.2017 திகதி அன்று சின்னச்சிப்பிக்குளம் கிராமத்துக்கு கௌரவ அமைச்சராகிய நீங்கள் வருகைதந்து நிகழ்வொன்றில் கலந்துகொண்ட  பின்னர் வேறொரு கிராமத்துக்குச் சென்று அங்கே எமது கிராமத்தின் பள்ளிவாசல் நிர்வாகத்தையும் அமைச்சர் ஒருவரையும்  சம்பந்தப்படுத்தி நீங்கள் வெளியிட்ட பிழையான கருத்து கருத்து எமக்கு மனவேதனையையும் அபகீரத்தியையும் ஏற்படுத்தியுள்ளது. முஸ்லிம் கட்சியின் தலைவராகிய நீங்கள் இவ்வாறான பொறுப்பற்ற கருத்தொன்றை எந்தவிதமான அடிப்படைகளுமின்றி வெளியிட்டிருப்பது வேதனையானது. எமது பள்ளிவாசல் நிர்வாகத்தை அகௌரவப்படுத்துவதாகவும் பள்ளி நிர்வாகத்தின் சுயாதீனமான நடவடிக்கைக்கு களங்கம் ஏற்படுத்துவதாகவும் எமது செயற்பாடுகளை மலினப்படுத்துவாதாகவும் உங்களது கருத்து அமைந்துள்ளது. 

எமது கிராமத்துக்கு அமைச்சர் ஹக்கீம் வருகை  தரும்போது அதற்கு    எந்தவிதமான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கக் கூடாதென அமைச்சர் ஒருவர் எங்களை அச்சுறுத்தி இருந்ததாகவும் குறிப்பாக பள்ளிவாசல் தலைவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்ததாகவும் நீங்கள் குற்றஞ்சாட்டியுள்ளீர்கள். வன்னி மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் மீதே இந்த அபாண்டங்களை சுமத்தியுள்ளீர்கள் என்பது உங்கள் பேச்சில் இருந்து விளங்குகின்றது. உங்களது வருகை தொடர்பாக அமைச்சர் றிஷாட் எங்களுடன் எந்த விடயமும் பேசவில்லை  எனவே முஸ்லிமாக இருந்து கொண்டு இன்னொரு முஸ்லிம் மீது வீண்பழி சுமத்தாதீர்கள்.

 அரசியல் ரீதியில் உங்களுக்கும் அமைச்சர் றிஷாதுக்குமிடையிலான போட்டியில் எமது கிராமத்தின் பள்ளி நிர்வாகத்தை சம்பந்தப்படுத்தி இருப்பது கவலையானது.  இந்த விடயத்தில் எங்களை நீங்கள் பலிக்கடாவாக்கியுள்ளீர்கள் என்று பள்ளி பரிபாலனசபைத் தலைவர் டி.எம்.இம்தியாஸ் அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



No comments

Powered by Blogger.