Header Ads



ரணிலின் அரசியல் வாழ்க்கையும், இம்தியாஸும்..!!

-விடிவெள்ளி-

பிரதமர் ரணிலின் 40 வருட அரசியல் வாழ்க்கை தொடர்­பில் இம்தியாஸ் பாக்கிர் மாக்காருடன் நேர்காணல் 

பிர­த­ம­ரு­ட­னான முத­லா­வது சந்­திப்பு எப்­போது நிகழ்ந்­தது-?
1973 ஆம் ஆண்டு, ஐக்­கிய தேசியக் கட்­சியின் பழைய தலை­மை­ய­க­மான ஸ்ரீகொத்தா மண்­ட­பத்தில் வைத்தே எமது தொடர்பு ஆரம்­ப­மா­னது. அப்­போது நான் பல்­க­லைக்­க­ழக மாண­வ­னாக இருந்தேன். அத்­துடன் ஐ.தே.க.மாணவர் முன்­ன­ணியின் மத்­திய செயற்­பாட்டு சபை உறுப்­பி­ன­ரா­கவும் பணி­யாற்றிக் கொண்­டி­ருந்தேன். தற்­போது தேசிய சேவைகள் சங்­கத்தின் பொதுச் செய­லா­ள­ராகக் கட­மை­யாற்றிக் கொண்­டி­ருக்கும் ஸ்ரீனால் டி மெல் என்­ப­வரே ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை எனக்கு முதன்­மு­த­லாக அறி­முகம் செய்து வைத்தார். 

பழைய ஸ்ரீகொத்தா மண்­ட­பத்தில் பல­கையால் அமைக்­கப்­பட்ட மாடிப்­ப­டிகள் மீது நான் ஸ்ரீனால் டி மெல்­லுடன் ஏறிக் கொண்­டி­ருந்தேன். அப்­போது அதே படி­களில் வந்து கொண்­டி­ருந்த ஓர் இளை­ஞரைச் சுட்­டிக்­காட்டி “வரு­கி­ற­வரைத் தெரி­யுமா?” என்று ஸ்ரீனால் என்­னிடம் வின­வினார். “தெரி­ய­வில்­லையே” என்று நான் பகர்ந்தேன். “இவர்தான் ரணில் விக்­கி­ர­ம­சிங்க எஸ்மண்ட் விக்­கி­ர­ம­சிங்­கவின் புதல்வர்” என்று ஸ்ரீனால் எனக்கு ரணிலை அறி­முகம் செய்து வைத்தார். உடனே நான் அவ­ருக்கு கைலாகு கொடுத்து “மிஸ்டர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அவர்­களே” என்று கௌர­வ­மாக விளித்தேன். எனது பெய­ரையும் தெரிந்து கொண்ட அவர், இம்­தியாஸ் என்னை “விக்­கி­ர­ம­சிங்க அவர்கள்” என்று அழைக்கத் தேவை­யில்லை. வெறு­மனே “விக்­ர­ம­சிங்க என்று மாத்­திரம் சொன்னால் போதும்” என்று மிகவும் எளி­மை­யாக பகிர்ந்தார். இதுவே எங்கள் இரு­வ­ருக்கும் இடை­யி­லான முதல் சந்­திப்பும் முதல் உரை­யா­ட­லு­மாகும். 

ரணில் விக்­ர­ம­சிங்­கவின் பாரா­ளு­மன்ற பிர­வே­சத்தின் ஆரம்பம் எப்­போது நிகழ்ந்­தது? 

ரணில் விக்­ர­ம­சிங்க 1977 ஆம் ஆண்டு முதன்­மு­த­லாக பாரா­ளு­மன்­றத்­திற்குத் தெரிவு செய்­யப்­பட்டார். அத்­துடன் வெளி­நாட்டு விவகாரங்களுக்கான பிரதி அமைச்­ச­ரா­கவும் நிய­மனம் பெற்றார். அப்­போது வெளி­நாட்டு அமைச்­ச­ராக ஏ.ஸீ.எஸ்.ஹமீத் பத­வி­யி­லி­ருந்தார். வெளி­வி­வ­கார அமைச்சர்  என்ற வகையில் சர்­வ­தேச நாடு­க­ளுடன் நெருங்­கிய உற­வு­களை வைத்துக் கொண்டு நாட்டை உயர்­நி­லைக்குக் கொண்டு வரும்  பாரிய பொறுப்பை ஜனா­தி­பதி ஜே.ஆர். அமைச்சர் ஹமீத் மீது சுமத்­தி­யி­ருந்தார். இதனால் ஏ.ஸீ.எஸ்.ஹமீத் பெரும்­பா­லான காலத்தை வெளி­நாட்டு விஜ­யங்­க­ளிலே கழித்து வந்தார். இதனால் மேற்­படி அமைச்சின் பிர­தி­ய­மைச்­ச­ரா­க­வி­ருந்த ரணில் விக்­கி­ர­ம­சிங்க அடிக்­கடி பதில் அமைச்சுப் பொறுப்­பை­யேற்று கட­மை­யாற்றும் வாய்ப்பைப் பெற்றார். இதனால் இளம்­வா­லிபப் பரு­வத்­தி­லேயே பொறுப்பு வாய்ந்த பத­வியைக் கையாளும் மிகவும் பாரி­ய­தொரு அனு­பவம் இவ­ருக்குக் கிடைத்­தது. 

ஜனா­தி­பதி பிரே­ம­தாஸ கொலை செய்­யப்­பட்­டதன் பின்னர் உரு­வான அரா­ஜக சூழ்­நி­லை சமா­ளிக்கப்பட்டதில் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கு பங்குண்டா?

1993 ஆம் ஆண்டு மேதி­னத்­தன்று ஜனா­தி­பதி பிரே­ம­தாஸ கொல்­லப்­பட்ட சந்­தர்ப்­பத்தில் அந்த இடத்­தி­லி­ருந்து லங்­கா­தீப நிறு­வன வாக­னத்தில் பய­ணித்துக் கொண்­டி­ருந்த ரணில் அதில் என்­னையும் ஏற்­றிக்­கொண்டு வந்தார். அவர் பாது­காப்பு அமைச்­சுக்குப் போவ­தா­கவும் என்னை மேதினக் கூட்டம் இடம் பெறும் இடத்­திற்குச் சென்று அங்­குள்ள எரா­னந்­த­விடம் வைப­வத்தைத் தொடர்ந்து நடத்த வேண்டாம் என்று கூறும் படியும் என்னைப் பணித்தார். நானும் அவ்­வாறு செய்தேன். பாது­காப்பு அமைச்­சுக்குச் சென்று உரிய நட­வ­டிக்­கை­களை உட­ன­டி­யாக மேற்­கொண்ட ரணில், அங்கு பிர­தமர், பிர­தம நீதி­ய­ரசர், சட்­டமா அதிபர், சபா­நா­யகர் ஆகி­யோரை உட­ன­டி­யாக வர­வ­ழைத்து, பதில் ஜனா­தி­ப­தி­யாக பிர­த­மரை சத்­தி­யப்­பி­ர­மாணம் செய்ய வைத்து நாட்டு நிர்வாகம் தொடர வழி சமைத்தார்.

நீங்கள் ரணில் விக்­ர­ம­சிங்­கவை விமர்­சித்த சந்­தர்ப்­பங்கள் குறித்து….. ?

ரணில் விக்­ர­ம­சிங்­கவை நான் கட்­சிக்­குள்ளே ஒரு சில விடயங்கள் குறித்து விமர்சித்ததுண்டு. அரசியல் செயற்பாடுகளின் போதும் எங்களுக்குள் கருத்து வேற்றுமைகள் நிலவிய சந்தர்ப்பங்களும் இருந்துள்ளன. இவை யாவும் தனிப்பட்ட ரீதியில் எழுந்த பிரச்சினைகள் அல்ல. கட்சியை வெற்றிப்பாதையில் இட்டுச் செல்லவும் கட்சியின் பலத்திற்கு உரம் சேர்க்கவுமே விமர்சனங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டனவேயன்றி கட்சியை பலவீனப்படுத்தும் நோக்கத்திற்கல்ல. கட்சியிலிருந்து நாம் தூரமாகாதிருந்ததொன்றே இதற்குச் சான்றாகும். கட்சியின் அடிப்படைக் குறிக்கோளில் எங்களுக்கிடையே கருத்து வேற்றுமை கிடையாது.

No comments

Powered by Blogger.