Header Ads



'மாநாயக்க தேரர்கள், நடு நிலையாக செயற்பட வேண்டும்'

மாநாயக்க தேரர்கள் நடு நிலையாக செயற்பட வேண்டுமென தென் மாகாண முதலமைச்சர் சான்  விஜயலால் டி சில்வா தெரிவித்துள்ளார். ஆட்சி பொறிமுறைமை உள்ளிட்ட நாட்டின் அனைத்து விடயங்கள் தொடர்பிலும் பீடங்களின் மாநாயக்க தேரர்கள், நடுநிலையான கொள்கைகளை பின்பற்ற வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக பௌத்த மதத்திற்கு உரிய இடம் அளிக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ள அவர் மாநாயக்க தேரர்கள் ஒரு பக்கச்சார்பாக கருத்து வெளியிடுவது பொருத்தமாக அமையாது என குறிப்பிட்டுள்ளார்.

அம்பலாங்கொடை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.