Header Ads



ரணில் பெற்ற அதியுயர் விருது, போட்டுத்தாக்கிய வாசுதேவ

தனது 40 வருட அரசியல் வாழ்க்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பெற்றுக்கொண்ட அதியுயர் விருதாக அவர் அர்ஜுன் மகேந்திரனுடன் சேர்ந்து செய்த பிணைமுறி மோசடி விவகாரமே என மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார எள்ளி நகையாடியிருக்கின்றார்.

இது தொடர்பில் நாடாளுமன்றில் நேற்று அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிணைமுறி மோசடி விவகாரத்தில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தொடர்பான திடுக்கிடும் தகவல்கள் பல இப்போது வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

ஏற்கனவே இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் பகிரங்கப்படுத்தப்பட்டபோதும் ரவி கருணாநாயக்க அந்த விவகாரத்தைப் பூசிமெழுகப் பார்த்தார். பிரதமர் ரணிலும் அந்த விவகாரத்தைப் பெரிதுபடுத்தாமல் மூடி மறைத்திருக்கிறார்.

இப்போது இந்த விவகாரம் ஆணைக்குழுவின் முன்னிலையில் அம்பலமாகியுள்ளதால் அவர்கள் இருவரும் திரிசங்கு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

நாட்டில் சட்டமும் ஒழுங்கும் திசை தெரியாமல் போய்விட்டன என்பதற்கு இது நல்ல உதாரணம் என்றார்.

No comments

Powered by Blogger.