டுபாயிலிருந்து இலங்கை செல்வந்தரின், தாயை கடத்த போட்ட திட்டம் அம்பலம்
இலங்கையின் செல்வந்தர்கள் வரிசையில் மூன்றாம் நிலையில் இருக்கும் பிரபல வர்த்தகரின் தாயை கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொள்ள திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
பாதாள உலகக் குழுத் தலைவர் மாகந்துரே மதுஸ் டுபாயிலிருந்து இந்த திட்டத்தை தீட்டியுள்ளதாக புலனாய்வுப் பிரிவிற்கு தகவல் கிடைத்துள்ளது.
களுத்துறை பிரதேசத்தில் வைத்து குறித்த வர்த்தகரின் தாயை கடத்துவதற்கு பாதாள உலகக்குழுவினர் மேற்கொண்ட முயற்சி குறித்த தகவல்கள் கிடைத்ததனைத் தொடர்ந்து இது குறித்து பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தாயாரின் பாதுகாப்பு குறித்து விசேட கவனம் செலுத்துமாறு புலனாய்வுப் பிரிவினர் குறித்த வர்த்தகருக்கு அறிவித்துள்ளனர்.
வர்த்தகரின் தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்களும், சிவில் உடை தரித்த புலனாய்வுப் பிரிவினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மதுஸ் என்ற பாதாள உலகக்குழுத் தலைவரை கைது செய்ய சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
Post a Comment