Header Ads



இலங்கையின் டெங்கு பற்றி, பிரிட்டனில் எச்சரிக்கை

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரித்தானியர்களுக்கு அந்த நாட்டு அரசாங்கம் இலங்கையில் நிலவும் டெங்கு நோய் தொடர்பான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

பிரித்தானிய அரசாங்கத்தின் உத்தியோக பூர்வ இணையத்தளம் ஒன்றிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போது டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும் அது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் டெங்கு நுளப்பு மற்றும் தீடீர் காய்ச்சல்களில் இருந்து பாதுகாப்பாக இருக்குமாறும் பிரித்தானிய அரசாங்கம் தமது சுற்றுலா பயணிகளை எச்சரித்துள்ளது.

இதேவேளை, டெங்கு தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்து 732 ஆக அதிகரித்துள்ளது.

அவற்றுல் அதிகமானோர் மேல் மாகாணத்திலேயே அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.