Header Ads



உயிரிழந்த நீதிபதியின் பாதுகாவலருக்கு, பதவி உயர்வு

 -பாறுக் ஷிஹான்-

யாழ்  மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்பாதுகாவலரான பொலிஸ் சார்ஜன்ட் ஹேமச்சந்திர  உப பொலிஸ் பரிசோதகர் (எஸ்.ஐ)  பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

நேற்று(22) மாலை  நீதிபதியின்   வாகனத்தை இடைமறித்து நடாத்தப்பட்ட  துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த  அவருக்கு    உயிரிழந்த நிலையில் இப்பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 

 நல்லூர் ஆலயப் பின் வீதி வழியாகப் பயணித்த மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் வாகனத்தை நோக்கி  இனந்தெரியாத நபர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நிலையில்  மேல் நீதிமன்ற நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர்கள் இருவர் படுகாயமடைந்தனர்.

அவர்களில் பொலிஸ் சார்ஜன்ட் ஹேமச்சந்திர (வயது-58)  சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.

இவர் மேல் நீதிமன்ற நீதிபதியின் மெய்ப்பாதுகாவலராக 17 ஆண்டுகள் கடமையாற்றி வந்துள்ளார்.

மேலும் இரு   மெய்ப்பாதுகாவலர்களின் அர்ப்பணிப்பான கடமையினால்  மேல் நீதிமன்ற நீதிபதிக்கு  பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

1 comment:

Powered by Blogger.