Header Ads



ஜனாதிபதி கேட்டால், எனது அமைச்சை கொடுக்கத் தயார் - சாகல

அழுத்­தங்கள் இன்றி நான் சுயா­தீ­ன­மா­கவே சட்டம் ஒழுங்கு அமைச்சின் கட­மை­களை முன்­னெ­டுக்­கின்றேன். ஜனா­தி­பதி என்­னிடம் இருந்து அமைச்சைப் பொறுப்­பேற்று வேறு அமைச்சுப் பொறுப்பில் என்னை கடமை செய்­யு­மாறு பணிப்­பா­ரானால் அது தொடர்பில் எனக்கு ஆட்­சே­பணை இல்லை. அந்த அமைச்­சிலும் இதே போன்று சிறப்­பாக சேவை­களை முன்­னெ­டுப்பேன் என சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்­நா­யக்க தெரி­வித்தார்.

அலரி மாளி­கையில்  நேற்று நடைபெற்ற சார்க் நாடு­களின் சட்டம் ஒழுங்கு அமைச்­சர்­களின் கூட்டம் தொடர்பில் விளக்­க­ம­ளிக்கும் ஊடக்­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொன்டு ஊடக்­வி­ய­லா­ளர்­களின் கேள்­விக்கு பதி­ல­ளிக்கும் போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.

ஜனா­தி­பதி மைதி­ரி­பால சிறி­சேன அமைச்­ச­ரவை கூட்­டத்தின் போது பொலி­ஸாரின் நட­வ­டிக்கை தொடர்பில் கார­சா­ர­மாக விமர்­சித்­தி­ருந்தார். குரிப்­பாக ஊழல் ஒழிப்பு தொடர்பில் இடம்­பெறும் விசா­ர­ணைகள் சரி­யாக இடம்­பெ­ற­வில்லை என ஜனா­தி­பதி குற்றம் சுமத்தி இருந்­த­துடன் பொலிஸ் தினைக்­க­ளத்தை மூன்று மாதத்­துக்கு தன்­னிடம் ஒப்­ப­டைத்தால் குற்ற­வா­ளிகள் அனை­வ­ரையும் கைது செய்து காட்­டு­வ­தா­கவும் கூறி­யி­ருந்தார்.

இது தொடர்பில் கேட்ட போதே இந்த பதிலை அளித்த சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்­நா­யக்க,  அது தொடர்பில் மேல­திக கேள்­வி­களை கேட்க முற்­பட்ட போது அதி­லி­ருந்து நழுவி பிறிதொரு ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்வதாகவும் அதில் கேள்விகளுக்கு பதிலளிப்பதாகவும் கூறிவிட்டு சென்ரார். 

No comments

Powered by Blogger.