Header Ads



மாணவர்களுக்கு உதவ இணையுமாறு, ஸம் ஸம் நிறுவனம் அழைப்பு

வருங்காலத் தலைமுறையினரை தலை நிமிர்ந்து வாழச் செய்ய ஆத்மீகத்துடன் கூடிய கல்வியைப் பெற்றுக் கொடுப்பது அத்தியவசியமாகும். வறுமையினாலும் இன்னும் பல காரணங்களாலும் கல்வியைத் தொடர முடியாமல் பல மாணவர்கள் கல்வி வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைக்கின்றனர்.அவர்களை கல்விப் பாதையில் தொடர்ந்து பயணிக்கச் செய்வது சமூகத்தின் மீதுள்ள கடமையாகும். 

ஏழை மாணவர்களின் கல்விக்குக் கை கொடுக்கும் நோக்கில் ஸம் ஸம் பவுண்டேஷன் School with a Smile எனும் வேலைத் திட்டத்தை கடந்த சில வருடங்களாக செயற்படுத்தி வருகின்றது. இவ் வருடம் 14500 மாணவர்கள் இத்திட்டத்தினால் பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இத் திட்டத்தின் மூலம் வருமானம் குறைந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் 3000 ரூபா பெறுமதியான ஒரு பாடசாலை உபகரணப் பொதியைப் பெறுகிறார்.இதில் ஒரு புத்தகப் பை,அப்பியாசக் கொப்பிகள்,காகிதாதிகள் மற்றும் 1000 ரூபா பெறுமதியான சப்பாத்துக்கான ஒரு வவுச்சர் என்பன உள்ளடங்குகின்றன.

மாணவர்களின் கல்வி வாழ்க்கை இடைநிறுத்தப்படுவதைத் தடுப்பதற்கும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருக்கும் மாணவர்கள் கல்வியைத் தொடர்வதற்கும் பெற்றோர்களின் சுமையைக் குறைப்பதற்கும் என இத் திட்டம் பல நோக்கங்களுக்காக நடைமுறைப்படுத்தப்படுகிறது. இத் திட்டம் முஸ்லிம்களை இலக்காகக் கொண்டு மாத்திரம் அல்லாமால் இத் திட்டத்தில் 30 வீதம் முஸ்லிம் அல்லாத மாணவர்களுக்கும் வழங்கப்படுவது இதன் சிறப்பம்சமாகும். இதனால்  சகவாழ்விற்கான விதையை பிஞ்சு உள்ளங்களில் விதைப்பதிலும் நாம் அனைவரும் ஒரே நாட்டின் மக்கள் என்ற உணர்வை ஊட்டுவதிலும் இத் திட்டம் வெற்றியடைந்துள்ளது என்பது எமது அனுபவமாகும்.

நாடு முழுக்க வசிக்கும் அனைத்து மாணவர்களின் தேவையையும் ஒரு நிறுவனத்தினால் நிறைவு செய்ய முடியாது என்பதே யதார்த்தம்.ஆனால் ஒவ்வொரு ஊரிலும் உள்ள பள்ளிவாசல் நிர்வாகம்,சமூக நிறுவனங்கள் மனது வைத்தால் இதனை சாத்தியப்படுத்தலாம். அந்தவகையில் எதிர்வரும் கல்வி ஆண்டுக்கான School with a Smile வேலைத் திட்டம் தற்போது முன்னெடுக்கப்படும் இச் சந்தர்ப்பத்தில் உங்களுடன் ஒரு மகிழ்ச்சியான விடயத்தை பகிர்ந்து கொள்கின்றோம். 

இது போன்ற செயற் திட்டத்தை உங்கள் ஊரிலும் நீங்கள் அமுல்நடாத்த உங்களுக்கு ஒரு அரிய சந்தர்ப்பம் காத்திருக்கிறது.250 மாணவர்களுக்குக் குறையாத தொகையை நீங்கள் பொறுப்பேற்றால் அதே தொகையை ஸம் ஸம் பவுண்டேஷன் உங்களுக்கு வழங்கத் தயாராக இருக்கின்றது என்ற செய்தியை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம். 

உதாரணமாக ஒரு ஊரில் உள்ள ஒரு நிறுவனமோ அல்லது பல நிறுவனங்களோ இணைந்து 500 மாணவர்களுக்கான உதவித் தொகையை வழங்க முன்வரும் பட்சத்தில் ஸம் ஸம் பவுண்டேஷன் மேலும் 500 மாணவர்களுக்கு உதவி செய்யும். அப்போது அப் பிரதேசத்தில் 1000 மாணவர்கள் இத் திட்டத்தினால் பயன்பெறுவர். 

அந்தவகையில் ஸம் ஸம் பவுண்டேஷன் எதிர்வரும் கல்வி ஆண்டில் 15,000 மாணவர்களுக்கு உதவத் தயாராக உள்ளது.இத் திட்டத்தை நீங்கள் எம்முடன் இணைந்து செயற்படுத்த முன்வரும் பட்சத்தில் உங்கள் பிரதேசத்தில் 30 வீதம் முஸ்லிம் அல்லாத மாணவர்களுக்கும் இப் பொதிகள் வழங்கப்பட வேண்டும் என்பது எமது நிபந்தனையாகும்.எந்தப் பிரதேசத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பதை ஸம் ஸம் நிறுவனமே தீர்மானிக்கும்.

எனவே இது தொடர்பில் ஆர்வம் உள்ளவர்கள் ஆகஸ்ட் 31 ஆம் திகதிக்கு முன்னர் எம்மைத் தொடர்பு கொள்ளவும்.அதற்குப் பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. 
தொடர்புகளுக்கு 

திட்ட முகாமையாளர்
Rizwan Seedin 0772118888
www.schoolwithasmile.com

No comments

Powered by Blogger.