Header Ads



ஓரளவு பிழைத்தாலும், எங்கு போய் மோதும் என்று தெரியாது - ரணில்

நாட்டின் முக்கியமான பிரச்சினைகளை தீர்க்கவே தேசிய அரசாங்கம் நிறுவப்பட்டது. இரு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து செல்வது மிகவும் கடினமான பயணமாகும். எச்சரிக்கையாக தான் இருக்க வேண்டும். ஓரளவு பிழைத்தாலும் எங்கு போய் மோதும் என்று தெரியாது. எனினும் இவையனைத்தையும் அறிந்த பின்னரே தேசிய அரசாங்கத்தை நிறுவினோம். ஆகவே நாட்டின் நலனை கருத்திற்கொண்டு தேசிய அரசாங்கத்தை வெற்றிகரமாக கொண்டு செல்வதற்கு இரு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் புதிய அடுக்குமாடி வீட்டு திட்டத்திற்கு அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எம்.எம்.மின்ஹாஜ்

No comments

Powered by Blogger.