"சிங்கள காழ்ப்புணர்வை, வசதியாக பாவிக்கும் தமிழர் தரப்பு"
பொதுபலசேனாவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி டிலந்த விதானகே வழமைபோல் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீது ஒரு புதிய குற்றச்சாட்டை சுமத்தியிருக்கிறார். அதாவது ச.தொ.ச. வுக்கு சீனி இறக்கப்பட்ட கொள்கலனிலிருந்து 320 கோடி ரூபா பெறுமதியான கொக்கைன் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளமை பாரதூரமான விடயம். இக்கடத்தலின் பின்னணியில் அரசியல் இருப்பதால் இந்நிறுவனத்தின் பொறுப்பாளரான அமைச்சர் ரிஷாத் பதியுதீனை ஜனாதிபதி பதவி விலக்கி விட்டு நியாயமான விசாரணை நடாத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இவ்விடயமாக இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்திலுள்ள ச.தொ.ச. களஞ்சியசாலைக்கு சீனி கொண்டுவரப்பட்டது பற்றி கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் ஊடகப் பிரிவு பின்வருமாறு விளக்கமளித்தது. இது முற்றிலும் பொய்யாகும். அமைச்சருக்கும் இதற்கும் தொடர்பு இல்லை. அமைச்சர் மீது அரசியல் ரீதியான காழ்ப்புணர்வு கொண்டவர்களும் ஒரு சில அரசியல் கட்சிகளுமே இதில் அமைச்சரை தொடர்புபடுத்துகின்றனர்.
ச.தொ.ச.சீனி இறக்குமதி தனியார் நிறுவனங்களுக்கு வாராவாரம் டென்டர் மூலம் வழங்கப்படுகிறது. குறித்த வாரத்துக்குரிய டென்டர் ரஞ்சிதா பிளஸ் எனும் நிறுவனத்துக்கே வழங்கப்பட்டிருந்தது. வில்பத்துவில் நிகழும் முஸ்லிம் குடியேற்றங்களை எதிர்க்கும் இனவாத தேரர்களே தொடர்ந்து அமைச்சர் மீதும் அவரது செயற்பாடுகளின் மீதும் பல குற்றச்சாட்டுகளை சுமத்தி போதைப் பொருளில் சம்பந்தப்படுத்தினார்கள். காரணம், அமைச்சரைப் பழிவாங்க வேண்டும் எனும் நோக்கமேயாகும் எனக் கூறலாம். இதில் அமைச்சரின் சகோதரரையும் உட்படுத்தினார்கள். கலாநிதி டிலந்த விதானகே தனது பழியுணர்வு காரணமாகவே புத்தியைப் பறிகொடுத்திருக்கிறார். டென்டர் பெற்றவரின் செயலுக்கு பெற்றவரே பொறுப்பு. அமைச்சர் பொறுப்பல்ல. தண்டிப்பது மட்டுமே அமைச்சரின் பொறுப்பு. இதை அந்த கலாநிதியால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.
இந்த கலாநிதி மட்டும்தான் பல ஆண்டுகளாக அரசிடம் போதைப் பொருள் பற்றி அச்சுறுத்தி வருகிறாராம். இவர் மட்டுமல்ல, இன்னும் பலரும் கூட பல ஆண்டுகளாக எச்சரிக்காமல் இல்லை. போதைப் பொருள் விற்பனையிலும் பாவனையிலும் ஜாதி, மதமே இல்லை. இவரோ முஸ்லிம்கள் மீது மட்டுமே பழிபோட்டு வந்திருக்கிறார்.
எப்போது ஜே.ஆரின் திறந்த பொருளாதாரக் கொள்கை வந்ததோ அப்போதே போதைப் பொருள், ஆயுதப் பாவனை, சூது, களியாட்டம் ஆகியவை பெருகிவிட்டன. விகிதாசார ரீதியில் பார்த்தால் இலங்கையில் போதைப் பொருளுக்கும் ஆயுத பாவனைக்கும் சூதுக்கும் களியாட்டத்துக்கும் பலியானோர் முஸ்லிம்களில் சொற்பமானோரே எனலாம். எனவே, போதைப்பொருள் விற்பனையிலும் பாவனையிலும் முஸ்லிம்களை மட்டுமே அடையாளப்படுத்துவது இன, மத, வெறியாகும். அமைச்சரின் கைத்தொழில் வர்த்தக அமைச்சே டிலந்த விதானகேயின் கண்ணைக் குத்துகிறது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
அதனால்தான் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை விசாரிக்குமாறும் அவரைப் பதவியிலிருந்து விலக்கிவிடுமாறும் ச.தொ.ச.வுக்கு பொறுப்பாக அவர் இருக்கும் வரை நியாயமான விசாரணை நிகழாது எனவும் கலாநிதி டிலாந்த விதானகே கூறுகிறார்.
தன்மீதும் வில்பத்து முஸ்லிம்களின் குடியிருப்பு மீதும் பொதுபலசேனா கொண்டிருக்கும் காழ்ப்புணர்வு காரணமாகவே பொதுவாக முஸ்லிம்கள் மீது வைராக்கியம் செலுத்தும் பொதுபலசேனா இப்படிக் கூறுகிறது என அமைச்சர் கூறுகிறார். இதை நிரூபிப்பதைப் போலவே டிலந்த விதானகேயின் அறிக்கையும் காணப்படுகிறது. சிலாபத்துறை, மன்னார் ஆகிய பகுதிகளுக்கும் கடல் மார்க்கமாக போதைப் பொருள் கடத்தி வரப்படுகிறது. அதைத் தடுக்கவே வில்பத்து முஸ்லிம் குடியேற்றங்களை எதிர்க்கிறோம். அங்குள்ள குடியேற்றங்கள் இதற்கு சாதகமாக அமையும். அங்குள்ள வனப்பிரதேசம் அழிக்கப்படுவது நிறுத்தப்படவேண்டும். நாம் இவ்வாறு அழுத்தம் கொடுத்தோம். வில்பத்து முஸ்லிம் குடியேற்றத்தின் மூலம் பாதுகாப்பு தொடர்பாக நாட்டுக்கு சவால் ஏற்படுவதோடு ஆயுதக்கடத்தலும் நிகழலாம் என்றோம் என டிலாந்த விதானகே குறிப்பிடுகிறார். சிலர் கூறுவதைப் போல் பிரேஸிலிருந்து சீனி இறக்குமதியைத் தடுக்கக் கூடாது.
போதை வஸ்தையே தடுக்க வேண்டும் என இவர் கூறுகிறாரே? அர்த்தம் என்ன? அமைச்சர் ரிஷாத் பதியுதீனை அகற்ற வேண்டும் என்பதற்காக சிலர் திட்டமிட்டு சில அதிகாரிகள் மூலம் பிரேஸிலிருந்து இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட சீனியோடு கொக்கைய்னும் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்ததா? இதன்மூலம் இனி பிரேஸிலிலிருந்து சீனி இறக்குமதியாவது தடுக்கப்படும் என டிலாந்த விதானகே கருதுகிறாரா? இதற்கு ஒத்துழைத்த பிரேஸில் அதிகாரிகள் பாதிக்கப்படுவார்கள் எனவும் நினைக்கிறாரா?
இந்த சந்தர்ப்பத்தை சில தமிழ்த்தரப்பினரும் வசதியாகப் பாவித்துக் கொள்கிறார்கள். அதாவது டிலாந்த விதானகேயின் பேரினவாதத்துக்கு உரமூட்டுகிறார்கள். அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் முஸ்லிம் குடியேற்ற செயற்பாடே அவர்களின் கோபத்துக்குக் காரணமாகும். 1991 ஆம் ஆண்டு 24 மணித்தியாலங்களுக்குள் வடக்கிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம்கள் 28 வருடங்களாகியும் இன்னும் முழுதாகக் குடியேற்றப்படவில்லை. நஷ்டஈடுகளும் இல்லை உயிரிழப்புகளுக்குப் பொறுப்பு கூறுவோரும் இல்லை. இந்நிலையில் தற்போது அரசு செய்ய வேண்டிய கடமையைத் தான் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் செய்து வருகிறார்.
யுத்த சூழலில் தமிழ் மக்களோடு முஸ்லிம்கள் தான் இழப்புகளை சந்தித்திருக்கிறார்கள். முஸ்லிம்களுக்கு நிவாரணம் தேவையில்லையா? தமிழ் மக்கள் தமது உரிமைகளை உரத்துப் பேசும் நிலையில் முஸ்லிம்கள் வாளாவிருப்பது எப்படி? வில்பத்து முஸ்லிம்களின் பூர்வீகமும் வாழ்விடங்களும் வாழ்வாதாரங்களும் காக்கப்பட வேண்டும். இது மனித உரிமையாகும்.
-A.J.M.NILAAM-
எந்த இனவாதி கொக்கரித்தாலும் அல்லாhவின் நாட்டம் இன்றி ஒன்றையும் உசுப்ப முடியாது முஸ்லிம் சமுகம் உங்களுடன் இருக்கின்றது
ReplyDeleteChange your title Jaffna muslim, Don't use the name of Tamil which is unnecessary for tgis article.
ReplyDeleteWhy don't you worry about the christians killing in Stria and Middle east
இந்த டமில் தரப்பை நம்பி தான் வடகிழக்கு இணையவேண்டுமாம்
ReplyDelete