Header Ads



இனவாத பிரச்சினை, இதுவரை நிறைவடையவில்லை - ரணில்

நாட்டில் யுத்தம் நிறைவடைந்த போதும் இனவாத பிரச்சினை இதுவரை நிறைவடையவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

இதன்பொருட்டு, அரசியல் தீர்வு ஒன்று அவசியம் என அவர் குறிப்பிட்டார். 

மன்னார் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இந்த கருத்தை வௌியிட்டார். 

அரசியலமைப்பு திருத்தம் ஊடாக நாட்டில் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக பொதுமக்கள் நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஆணையை வழங்கியிருப்பதாக அவர் தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.