Header Ads



மஹிந்தவுக்கும், கோத்தபாயவுக்கும் மன்னிப்பு வழங்க வேண்டும்..!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவையும் கைது செய்ய வேண்டும் என கூறும் அளவிற்கு நான் மட்டமான அரசியல்வாதி அல்ல என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை கூறினார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

கோத்தபாய விரைவில் கைது செய்யப்படுவார் என ஸ்ரீ.சு.கட்சி உறுப்பினர்களிடம் நான் கூறியதாக சில தகவல்கள் வெளிவந்துள்ளன. எனினும் குறித்த கருத்தை அமைச்சர் மறுத்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய காலத்தில் மிகவும் சிறப்பாக செயற்பட்டார். அவரை சிறையிலடைக்க கூறும் அளவுக்கு நான் முட்டாள் அல்ல என குறிப்பிட்டார்.

இவ்வாறு எனக்கு எதிராக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் குற்றங்கள் செய்திருந்தாலும் கூட அவர்களுக்கு மன்னிப்பு வழங்கும் நிலைப்பாட்டிலேயே தாம் இருப்பதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.