Header Ads



அரச அதி­காரி, நாக­ரீ­க­மான ஆடை, இயே­சுவின் துணை கிடைக்­கட்டும் என எமாற்றுகிறார்கள்..!

கொஸ்­வத்தை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட துலா­வல கிரி­மெட்­டி­யான பிர­தே­சத்தில் தனி­யாக வசித்து வரும் வயோ­திப பெண் ஒரு­வரின் வீட்­டுக்கு மோட்டார் சைக்­கிளில் சென்­றுள்ள இளைஞர் ஒருவர், அம்­மூ­தாட்­டியை ஏமாற்றி தான் ஓர் அரச அதி­காரி எனக்­கூறி இரு­ப­தா­யிரம் ரூபா பணத்தை தந்­தி­ர­மாகப் பெற்றுக் கொண்டு தப்பிச் சென்­றுள்­ள­தாக கொஸ்­வத்தை பொலிஸார் தெரி­வித்­தனர்.

குறித்த இளைஞர் மூதாட்­டி­யிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு “இப்­பி­ர­தே­சத்தில் திரு­டர்கள் உள்­ளனர். அவர்­க­ளி­ட­மி­ருந்து கவ­ன­மாக இருந்து கொள்­ளுங்கள், உங்­க­ளுக்கு இயே­சுவின் துணை கிடைக்­கட்டும்” எனக் கூறி­விட்டுச் சென்­றுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

நாக­ரீ­க­மான ஆடை அணிந்து கொண்டு மோட்டார் சைக்­கிளில் சென்­றுள்ள குறித்த இளைஞர் தான் அரச நலன் நட­வ­டிக்­கைகள் தொடர்­பான உயர் அதி­காரி எனக் கூறி அந்த வயோ­திபப் பெண்ணின் பெயர், முக­வரி உள்­ளிட்ட விப­ரங்­களை சரி­யாகக் கூறி நடித்­ததால் அம்­மூ­தாட்­டியும் அவரை நம்­பி­யுள்ளார்.

19,500 ரூபா, பணத்தை தற்­போது நீங்கள் தந்தால் அர­சாங்கம் பல இலட்சம் ரூபா பணத்தை இன்னும் ஓரிரு தினங்­களில் உங்கள் வங்கிக் கணக்­குக்கு வைப்புச் செய்யும் எனக் கூறி குறித்த பணத்தைப் பெற்றுக் கொண்டு சென்­ற­தோடு அங்­கி­ருந்து இன்­னு­மொரு 500 ரூபா­வையும் எடுத்துக் கொண்டு சென்­றி­ருப்­பது பின்னர் தெரிய வந்­துள்­ள­தாக அப்பெண் தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்பில் பின்னர் சந்­தேகம் ஏற்­பட்­டதால் அப்பெண் அய­ல­வர்­க­ளுக்கு தெரி­யப்­ப­டுத்­திய ­வே­ளையில் குறித்த இளைஞர் அங்­கி­ருந்து சென்­றி­ருந்­த­தா­கவும் தெரிவிக்கப்படுகின்றது. கொஸ்வத்தை பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.