Header Ads



தமிழ் மக்களும், சிங்கள மக்களும் சமனானவர்கள் - தெய்வங்களும் அப்படித்தான்..!!

சிறு­பிள்ளைகள் தமது எதிர்­கால வாழ்க்­கையை வெற்றி கொள்வதற்கு­ சிறு பரா­யத்­தி­லேயே அத்­தி­வராம் இடப்­ப­ட­ல் வேண்டும் என வட­மா­காண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரி­வித்தார். 

முன்­பள்ளி ஆசி­ரி­யர்­க­ளுக்­கான டிப்­ளோமா கற்கை நெறி­யினை பூர்த்தி செய்த மாண­வர்­க­ளுக்கு சான்­றிதழ் வழங்கும் நிகழ்­வா­னது நேற்று முன்தினம் யாழ்.பல்­க­லைக்­க­ழ­கத்தில் இடம்­பெற்­றது. இந்­நி­கழ்வில் பிர­தம விருந்­தி­ராக கலந்து கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் இதனைத் தெரி­வித்தார். 

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

சிறு­பிள்ளைகள் தமது எதிர்­கால வாழ்க்­கையை வெற்றி கொள்­ளத்­தக்­க­வ­கையில் சிறு பரா­யத்­தி­லேயே அத்­தி­வாரம் இடப்­ப­ட­ல் வேண்டும் அந்த அத்­தி­வாரத்தின் மீதே தான் அப் பிள்­ளைகளின் எதிர்­காலம் கட்­டப்­ப­ட­வேண்டும். ஆகவே ஒரு குழந்­தையின் அறிவை, ஆற்­றலை வளர்க்­கக்­கூ­டிய திறமை ஒரு முன்­பள்ளி ஆசி­ரி­ய­ருக்கு இருக்­க­வேண்டும். அதற்கு ஆசி­ரி­ய­ருக்கு அறிவு, திறமை, கல்விச் சான்­றிதழ் மட்டும் போதாது. அதற்கும் மேலாக கருணை, பொறுமை, சிநேக மனப்பான்மை போன்­ற­னவும் ஒன்­றாக கலந்­தி­ருக்­க­வேண்டும். மாண­வர்­க­ளு­டைய சுபா­வத்தை அவர்கள் புரிந்து கொள்­ள­வேண்டும். அவ்­வாறு இருந்­தாலே ஒரு வெற்­றி­க­ர­மான ஆசி­ரி­ய­ராக பணி­யாற்­ற­மு­டியும். 

இத்­த­கைய ஆசி­ரி­யர்­களை கவ­ன­மாக தேர்ந்­தெ­டுக்­க­வேண்டும். பொருத்­த­மான தகு­தி­யான தேர்ந்த ஆசி­ரி­யர்­களை எடுப்­பது கடி­ன­மான காரி­ய­மாகும். அதற்­கான அர­சாங்க நிறு­வனம் தற்­போது இல்லை. இந் நேரத்தில் ஆறுதல் நிறு­வனம் செய்த சேவை நன்­மை­ய­ளிக்­கக்­கூ­டிய செயற்­பா­டாகும். 

அந்த வகையில் ஆசி­ரியர் தொழி­லுக்கு தமது வாழ்­வா­தா­ரத்தை ஜீவ­னோ­பா­யத்தை முன்­னேற்­று­வ­தற்­காக தமது பணத் தேவையை பூர்த்தி செய்­வ­தற்­காக மாத்­திரம் இத் தொழிலுக்கு வந்­தி­ருப்பின் அது அவர்­களின் பல­வீ­ன­மா­கி­விடும். மாறாக இவ் ஆசி­ரியர் தொழிலில் இருப்­ப­வர்கள் இத­யத்தில் ஆர்­வமும் அபி­லா­சையும் அன்பும் நிறைந்­த­வர்­க­ளாக இருக்­க­வேண்டும். பணம் வரு­மானம் ஆகி­ய­வற்றை மட்­டுமே எதிர்­பார்த்தால் அவரும் ஏனைய தொழி­லா­ளர்­கள்போல் ஆகி விடுவார். ஆசி­ரி­யர்­க­ளுக்கும் ஏனைய தொழி­லா­ளர்­க­ளுக்கும் இடையில் வித்­தி­யாசம் உண்டு. ஆசி­ரி­யர்கள் தமது தொழிலைச் செய்­வ­தற்கு நல்ல சிந்­த­னையை மூல­தா­ர­மாக கொண்­டி­ருக்­க­வேண்டும். 

ஆசி­ரி­யர்கள் நாட்­டிற்கு சிறந்த பிர­ஜை­களை உரு­வாக்­கு­வ­தற்­கான தங்­க­ளது பூரண பங்­க­ளிப்பை வழங்­க­வேண்டும். மேலும் இந்­நாட்டில் வாழு­கின்ற இனங்­க­ளுக்­கி­டையே எந்த வித­மான பிரச்­சி­னை­களும் இல்லை. இங்கு குறிப்­பாக வடக்குத் தவிர்ந்த ஏனைய பிர­தே­சங்­களில் தமிழர், சிங்­க­ளவர், முஸ்லீம்கள் அனை­வரும் ஒன்­றா­கவே வாழ்­கின்­றார்கள். 

வடக்­கு­மா­கா­ணத்தின் முத­ல­மைச்­ச­ரது குடும்­பத்­தினர் கூட சிங்­கள மக்­க­ளுடன் நல்­லு­ற­வி­லேயே இருக்­கின்­றார்கள். அதே­போன்று லக் ஷ்மன் கதிர்­காமர் திரு­மணம் செய்­தது கூட சிங்­கள இனத்­தவர் ஒரு­வ­ரையே ஆகும். இவற்றை விட தெய்வ வழி­பாட்டில் கூட தமிழ் மக்­க­ளது தெய்­வங்­களும் சிங்­கள பௌத்த மக்களது தெய்வங்களும் ஒன்றாகவே தான் உள்ளன. இந்துக்கோயில்களில் இருக்கும் தெய்வங்கள்தான் பௌத்த கோவில்களிலும் இருக்கின்றன. அந்த வகையில் பார்க்கின்றபோது இந்நாட்டில் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் சமனானவர்கள். அதே போன்று நாட்டில் உள்ள அனைத்து இன மதத்தவர்களும் என அவர் தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.