Header Ads



வாய் பேசமுடியாத சிறுவனுக்கு மட்டக்களப்பு வைத்தியசாலையில் நடந்த சத்திரசிகிச்சை வெற்றி

மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லையில் வாய் பேச­மு­டி­யாத சிறுவன் ஒரு­வனை பேச வைப்­ப­தற்­கான சத்­திர சிகிச்சை  புதன்­கி­ழமை மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சாலை வட்­டா­ரங்கள் தெரி­வித்­தன.  ஏறாவூரைச் சேர்ந்த சிறு­வ­னுக்கே இந்த சத்­திர சிகிச்சை மேற் கொள்­ளப்­பட்­டது. 

மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லையின் காது மூக்கு தொண்டை வைத்­திய சத்­திர சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ்.ஜீவதாஸ் தலை­மையில் கொழும்­பி­லி­ருந்து வருகை தந்த விசேட வைத்­தி­யர்கள் குழு இந்த சத்­திர சிகிச்­சையை மேற் கொண்­டது. 

பிறப்­பி­லி­ருந்தே வாய் பேச­மு­டி­யாத இந்த சிறு­வ­னுக்கு பேச வைப்­ப­தற்­கான இந்த சத்­திர சிகிச்சை ஆறரை மணித்­தி­யா­ல­யங்கள் நடை­பெற்­ற­துடன் வெற்­றி­க­ர­மாக இந்த சத்­திர சிகிச்சை மேற் கொள்­ளப்­பட்­ட­தாக மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சாலை வட்­டா­ரங்கள் மேலும் தெரி­வித்­தன.

இந்த சிறு­வ­னுக்­கான  சத்­திர சிகிச்­சையை மேற்­கொள்­வ­தற்கு  ஏறாவூர் முக்­கி­யஸ்­தரும் திடீர் மரண விசா­ரணை அதி­கா­ரி­யு­மான நசீர் ஹாஜியார் பல்­வேறு முயற்­சி­களை மேற் கொண்­டி­ருந்தார். 

இந்த சத்திர சிகிச்சையை வெளியில் தனியார் வைத்திய சாலையில் செய்வதாயின் பல இலட்சம் ரூபா செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.