Header Ads



டெங்குவின் கோரம், தாயின் மடியில் குழந்தை மரணம்

டெங்கு நோயால் பீடிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த கர்ப்பிணியின் கர்ப்பைப்பைக்குள்ளேயே எட்டு மாத சிசு உயிரிழந்துள்ளதுடன், மறுநாள் தாயும் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ராஜகிரிய காசல் பெண்கள் வைத்தியசாலையில் மூன்று நாட்கள் தொடர்ந்து சிகிச்சைபெற்று வந்த கர்ப்பிணியின் வயிற்றிலேயே உயிரிழந்த சிசு சத்திரசிகிச்சையால் அகற்றப்பட்ட மறுநாள் தாயும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இந்தப் பெண் ஓயாத தலைவலி காரணமாக கடந்த 14ஆம் திகதி தலங்கம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக அவர் காசல் பெண்கள் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின், அங்கு இரத்தப் பரிசோதனை செய்யப்பட்ட போது அவருக்கு டெங்கு நோய் தொற்றியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 17ஆம் திகதி அவரது கர்பப்பையிலிருந்த எட்டு மாதக் குழந்தை இறந்தது. அடுத்த நாள் அந்தப் பெண்ணும் பலியாகியுள்ளார்.

No comments

Powered by Blogger.