Header Ads



சாய்ந்தமருதுவில் மருந்து விற்பனை, களஞ்சியசாலை எரிந்து நாசமாகியது

கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது நகரில் அமைந்துள்ள மருந்து விற்பனை நிறுவனத்தின் களஞ்சியசாலையில் நேற்று திங்கட்கிழமை இரவு ஏற்பட்ட தீ பரவல் காரணமாக அக்களஞ்சியசாலை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. 

மூடப்பட்டிருந்த இக்களஞ்சியசாலையினுள் நேற்று இரவு 10.45 மணியளவில் தீ பரவல் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டதை தொடர்ந்து கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயணைக்கும் நடவடிக்கையை ஆரம்பித்த போதிலும் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இரண்டு மணியளவிலேயே தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. 

அருகிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு தீ பரவாமல் கட்டுப்படுத்தப்பட்ட அதேவேளை குறித்த களஞ்சியசாலையில் இருந்த அனைத்து மருந்துகளும் தளபாடங்களும் எரிந்து நாசமாகியுள்ளன. 

மின் ஒழுக்கு காரணமாகவே தீ பரவல் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். 

No comments

Powered by Blogger.