Header Ads



மிகச் சிறுவய­தில், கர்ப்பம் தரிக்கும் சிறு­மிகள் - லக்­கலயில் ஆச்சரியம்

மிகச் சிறு வய­தி­லேயே கர்ப்பம் தரிக்கும் சிறு­மிகள் லக்­கல தேர்தல் தொகு­தியைச் சேர்ந்த லக்­கல, வில்­க­முவ, நாவுல, அம்­பங்­கஸ்க ஆகிய நான்கு பிர­தேச செய­லகப் பிரி­விலே ஆகக் கூடு­த­லாக காணப்­ப­டு­வ­தா­கவும்  இது தொடர்­பாக சுகா­தார அமைச்சு நாட­ளா­விய ரீதியில் மேற்­கொண்ட ஆய்­வின்­போதே மேற்­படி தகவல் வெளி­யி­டப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் மாத்­தளை மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பினர் ரோஹிணி கவி­ரத்ன தெரி­வித்தார்.

சம்­பந்­தப்­பட்ட பெண்­களின் குடும்ப சூழல், போதிய கல்வி அறி­வின்மை என்­ப­வையே இதற்குக் கார­ண­மென்றும் அவர் குறிப்­பிட்டார். மாத்­தளை செய­ல­கத்தில்  இடம்­பெற்ற மாவட்ட ஒருங்­கி­ணைப்புக் குழுக் கூட்­டத்­தின்­போதே அவர் மேற்­படி விப­ரங்­களை முன்­வைத்தார்.

இது தொடர்­பாக பெண்கள் மற்றும் சிறுவர் பரா­ம­ரிப்பு பிரி­வி­ன­ருக்கு அறி­வித்து அவர்கள் மூலம் குறிப்­பிட்ட பிர­தே­சங்­களில் விழிப்­பு­ணர்வு வேலைத் திட்­ட­மொன்றை உட­ன­டி­யாக முன்னெடுக்க நடவடிக்கை எடுப்பதென மேற்படி கூட்டத்தில் தீர்மானம் மேற் கொள்ளப்பட்டது.

No comments

Powered by Blogger.