Header Ads



அரசாங்கதிலிருந்து சிலர் விலகுவது உறுதியானது, தடுத்துநிறுத்த மைத்திரி முயற்சி

கூட்டு அரசாங்கத்திலிருந்து விலக நினைக்கும் உறுப்பினர்களிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

இந்தாண்டின் இறுதியில் நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து விலகிக் கொள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளனர்.

அவ்வாறான நிலைப்பாட்டை கொண்டிருப்போர் அந்த முடிவை எதிர்வரும் டிசெம்பர் 31 ஆம் திகதி வரை நிறுத்தி வைக்குமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களிடம், கட்சியின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சிலர் பதவிகளை விட்டு விலகி, தனியான அணியாகச் செயற்படுவது அல்லது எதிரணியுடன் இணைந்து கொள்வதென முடிவெடுத்துள்ளனர்.

இந்த நிலையில், பங்களாதேஷிற்கான விஜயத்திற்கு முன்னதாக, அவர்களைச் சந்தித்து தற்போதைய நிலைமைகள் தொடர்பாக ஜனாதிபதி கலந்துரையாடினார்.

இதன்போதே, அரசாங்கத்தை விட்டு வெளியேறும் முடிவை வரும் டிசெம்பர் 31ம் திகதி வரை நிறுத்தி வைக்குமாறு ஜனாதிபதி கோரியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்பாடு வரும் டிசெம்பர் மாதத்துடன் முடிவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.