Header Ads



அரசியலமைப்பை அரசாங்கம் கொண்டுவரும், அதில் எந்த மாற்றமும் இல்லை

அந்த ஆணைக்கு ஏற்பவே   பாராளுமன்றம்  புதிய அரசியலமைப்பை தயாரிக்கும்  பணியில் ஈடுபட்டு வருகின்றது.

 எனவே மக்கள் வழங்கியுள்ள  ஆணையின்படி அரசாங்கம்  அரசியலமைப்பை கொண்டுவரும்.    அதில் எந்த மாற்றமும் இல்லை.

அரசியலைப்பை தயாரித்து   அதனை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன்    நிறைவேற்றுவோம். தொடர்ந்து  உயர் நீதிமன்றம் ஆலோசனை வழங்கினால் சர்வஜன வாக்கெடுப்பிற்கு செல்வோம்.  

அதில்  மக்கள்  தமது முடிவை அறிவிப்பார்கள்.  அதுமட்டுமன்றி இந்த  விடயத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மிகவும் நேர்மையான முறையில் செயற்பட்டு வருகின்றார் எனவும்   ராஜித சேனாரட்ன சுட்டிக்காட்டினார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற  அமைச்சரவை முடிவுகளை  அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் சரமாரியாக எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.