Header Ads



சட்டவிரோதமாக மண் ஏற்றியவர்கள் மீது, துப்பாக்கிச் சூடு - இருவர் பலி

மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிசூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முந்தல்குமாரவேலியார் கிராமத்தில் சட்டவிரோத மண் ஏற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீதே, இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதிக்குச் சென்ற விசேட அதிரடிப்படையினரைக்கண்டு, மண் ஏற்றிக்கொண்டிருந்தவர்கள் தப்பிச்செல்ல முற்பட்டபோதே, இந்தத் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பகுதியில் பதற்ற நிலை காணப்படுவதன் காரணமாக பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டு, அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

No comments

Powered by Blogger.