Header Ads



முஸ்லிம்களுக்கு பொதுபலசேனா அழைப்பு

 -ARA.Fareel-

இலங்­கையில் ஐ.எஸ்.தீவி­ர­வா­தத்­தையும், முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தத்­தையும் அடி­யோடு இல்­லாமற் செய்­வ­தற்கு  முற்­போக்கு  சிந்­த­னை­களைக் கொண்ட முஸ்­லிம்கள் பொது­ப­ல­சே­னா­வுடன் கைகோர்க்க  வேண்­டு­மென அவ்­வ­மைப்பு  பகி­ரங்க  வேண்­டுகோள்  விடுத்­துள்­ளது. 

நடு­நிலை வகிக்கும்  சம்­பி­ர­தாய முஸ்­லிம்கள், ஏனைய மக்­க­ளுடன்  சமா­தா­ன­மாக வாழ­வி­ரும்பும் முஸ்­லிம்கள், புத்தர் சிலை மீது வெறுப்­ப­டை­யாத முஸ்­லிம்கள் என நாட்டில் நிறை­யப்பேர் இருக்­கி­றார்கள். அவர்கள் எம்­முடன்  இணைந்து கொள்­ள­லா­மெ­னவும் அழைப்பு விடுத்­துள்­ளது. 

நாம் வேற்­று­மை­களை மறந்து  தாய்­நாட்டின் நன்­மைக்­கா­கவும், பாது­காப்­பிற்­கா­கவும் இணைந்து செயற்­ப­டு­வதன் மூலம்  இலங்­கையில் சிங்­கள, தமிழ் மற்றும் இஸ்­லா­மிய  அடிப்­ப­டை­வா­தத்தைத்  துடைத்­தெ­றி­யலாம் என்றும் தெரி­வித்­துள்­ளது. 

ராஜ­கி­ரி­ய­வி­லுள்ள  பொது­ப­ல­சே­னாவின்  உத்­தி­யோ­க­பூர்வ  காரி­யா­ல­யத்தில் நடை­பெற்ற  ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு  உரை­யாற்­றிய அவ்­வ­மைப்பின்  நிறை­வேற்றுப்  பணிப்­பாளர் கலா­நிதி டிலன்த விதா­னகே  இவ் அழைப்­பினை விடுத்தார். 

இலங்­கையில் ஐ.எஸ்
இலங்­கையில் ஐ.எஸ்.தீவி­ர­வா­திகள் இல்லை என பாது­காப்பு  தரப்பும், உளவுப் பிரி­வி­னரும், அமெ­ரிக்க தூத­ர­கமும் தெரி­வித்­தாலும் இங்கு  ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் இருக்­கி­றார்கள். இவர்­களால் நாட்டின் பாது­காப்­பிற்கு அச்­சு­றுத்தல் இருக்­கி­றது என்று  நாம் உறு­தி­யாகக் கூறு­கிறோம். 

ஐ.எஸ். தீவி­ர­வாதம்  பற்றி பொது­ப­ல­சேனா  அமைப்பு  2013 ஆம்  ஆண்டில்  அர­சாங்­கத்­துக்கு எச்­ச­ரிக்கை விடுத்­தது. அக்­கா­லத்தில் பொது­ப­ல­சேனா ஐ.எஸ்.தீவி­ர­வாத  அமைப்­பைப்­போன்ற ஒரு இயக்கம் என்று பிர­சாரம் செய்­யப்­பட்­டது.

கடந்­த­கால  அர­சாங்கம்  ஐ.எஸ்.தீவி­ர­வாதம்  தொடர்­பாக நாம் எவ்­வ­ளவு எடுத்துக்  கூறியும்  அதில் கவனம் செலுத்­த­வில்லை.  பாது­காப்பு  பிரி­வி­னரால் அன்று ஐ.எஸ்.தீவி­ர­வா­தத்­துக்கு  எதி­ராக நட­வ­டிக்கை  எடுத்­தி­ருக்­கலாம்.  ஆனால்  முஸ்லிம் நாடுகள்  இலங்கை  அர­சாங்­கத்­துக்கு உதவி வழங்கி வந்­ததால்  நட­வ­டிக்கை  எடுக்­கப்­ப­ட­வில்லை. 

 இலங்­கை­யி­லி­ருந்து  உயர்­கல்­விக்­கான  புலமைப் பரிசில் பெற்று பாகிஸ்தான், சவூதி  அரே­பியா போன்ற  நாடு­க­ளுக்குச் சென்­ற­வர்கள் தீவி­ர­வா­தத்­துடன் தொடர்பு பட்­ட­வர்­க­ளா­கவே  நாடு திரும்­பினர்.  இவ்­வாறு  மாற்­றங்­க­ளுக்­குள்­ளாகி  திரும்­பி­யி­ருக்­கி­றார்கள் என அவர்­க­ளது பெற்­றோரே  எம்­மிடம் புகார் செய்­தி­ருக்­கி­றார்கள். 

அளுத்­கம சம்­பவம் 
2014  இல் இடம்­பெற்ற அளுத்­கம  சம்­பவம் ஐ.எஸ். உடன் தொடர்­பு­பட்­டது என நாம் உறு­தி­யாகக் கூறு­கிறோம். ஐ.எஸ். உடன் இச்­சம்­பவம் தொடர்பு பட்­ட­த­னாலே  மஹிந்த  ராஜபக் ஷவோ அல்­லது ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவோ எவ்­வித விசா­ர­ணை­க­ளையும்  முன்­னெ­டுக்­க­வில்லை. அளுத்­கம சம்­ப­வத்தின்  பின்­ன­ணியில் ஞான­சார  தேரரே  இருந்தார் என குற்றம் சுமத்­தப்­பட்­டது. 

ஆனால்  ஞான­சார  தேரர் அளுத்­க­ம­வுக்கு செல்­வ­தற்கு முன்பு  அங்குள்ள  பள்­ளி­வா­சலுக்கு இஸ்­லா­மிய தீவி­ர­வா­திகள் கொழும்பு மற்றும்  காத்­தான்­கு­டி­யி­லி­ருந்து அழைத்து  வரப்­பட்­டி­ருந்­தார்கள். இச்­சம்­பவம்  ஐ.எஸ். உடன் தொடர்பு பட்ட குழு­வி­ன­ராலே  முன்­னெ­டுக்­கப்­பட்­டது. 

ஐ.எஸ்.ஸின்  இஸ்­லா­மிய இராச்­சியம் 
ஐ.எஸ்.அமைப்பின்  இஸ்­லா­மிய இராச்­சி­யத்தின் வரை படத்தில் இலங்கை  ஒரு  மூலையில்  வரை­யப்­பட்­டுள்­ளது.  அதனால் இலங்­கையில்  ஐ.எஸ்.தீவி­ர­வாதம்  காலூன்றி உள்­ளது என்­பதை  நிச்­ச­ய­மாகக் கூற­மு­டியும்.  இலங்­கையில் வஹா­பிசம், இஸ்­லா­மிய  தீவி­ர­வாதம்  காலூன்றி  செயற்­ப­டு­வ­தாக முன்னாள் மேல் மாகாண ஆளுநர்  அலவி மௌலானா மற்றும்  ரியாஸ்­சாலி  என்போர் 2007 ஆம் ஆண்­டிலே தெரி­வித்­தி­ருந்­தனர். 

இலங்­கையில்  இஸ்­லா­மிய தீவி­ர­வாதம் இல்­லை­யென முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களும், மற்றும் சில  அமைச்­சர்­களும் கூறு­கி­றார்கள். ஆனால் அவர்­க­ளது கூற்றை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. ஐ.எஸ். தீவி­ர­வாதம் தொடர்­பாக  கடந்­த­கால ஜனா­தி­ப­தி­யி­டமும் முறை­யிட்டோம்.  இன்­றைய ஜனா­தி­ப­தி­யி­டமும்  முறை­யிட்­டுள்ளோம்.  கடிதம் அனுப்பி  வைத்­துள்ளோம். அர­சாங்கம் அவ­ச­ர­மாக  இப்­பி­ரச்­சி­னையைக் கையாள வேண்டும். 

No comments

Powered by Blogger.