Header Ads



யாழ்ப்பாண முஸ்லீம்கள், நீதிபதியின் மெய்ப்பாதுகாவலருக்கு அனுதாபம்


-பாறுக் ஷிஹான்-

யாழ்.ஐந்துசந்தியில் பழைய இரும்பு வியாபாரிகள் ஏற்பாட்டில் உயிரிழந்த யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்  மெய்ப்பாதுகாவலருக்கு அனுதாபம் தெரிவித்து நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வானது பழைய இரும்பு வியாபாரிகள் சார்பாக சமூச சேவகர் கே.எம் நிலாம் தலைமையில் இன்று(26) மதியம்  நடைபெற்றது.

இதன் போது உயிரிழந்த நீதிபதியின் மெய்பாதுகாவலரான உப பொலிஸ் பரிசோதகர் உண்மையான செயல்வீரன் என்றும் யாழ் முஸ்லீம் மக்களுடன் இறக்கும் வரை உறவாடி வந்துள்ளதாகவும் எனவே அந்த பொலிஸ் அதிகாரியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்வதாக சமூச சேவகர் கே.எம் நிலாம் குறிப்பிட்டார்.

உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரின் இறுதிக் கிரியைகள் இன்று  நடைபெறவுள்ளன.

அவரது சொந்த ஊரான சிலாபம் குமாரகட்டுவில் இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளன.

பொலிஸ் சார்ஜன்ட் பதவியிலிருந்து தற்போது உப பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்த்தப்பட்டுள்ள சரத் ஹேமசந்திரவின் பூதவுடலுக்கு பல தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.



No comments

Powered by Blogger.