Header Ads



சைப்ரஸ் நாட்டில் இலங்கையர், கொடூரமாக படுகொலை


சைப்ரஸ் நாட்டின் லிமாசோல் என்ற இடத்தில் இன்று அதிகாலை இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.42 வயதான இந்த இலங்கையரை கொலை செய்த நபரை சைப்ரஸ் நாட்டு பொலிஸார் தேடி வருகின்றனர்.

தொடர்மாடி வீடமைப்பு தொகுதியில் 6 வது மாடியில் உள்ள உறவினர் வீட்டில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் இலங்கை நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸார் வீட்டுக்கு சென்று அழைப்பு மணியை அழுத்தியுள்ளனர். கதவை திறந்த சந்தேகநபர் கத்தியுடன் தப்பிச் சென்றுள்ளார்.தப்பியோடிய சந்தேகநபரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சந்தேகநபர் அருகில் உள்ள வீட்டில் வசித்து வந்த ஆசிய நாடு ஒன்றை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் ஆசியர் எனவும் அவது முதல் பெயர் மாத்திரமே தமக்கு தெரியும் எனவும் சந்தேகநபரின் முழு விபரங்கள் தேடிப்பட்டு வருவதுடன் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் சைப்ரஸ் புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவரும் சந்தேகநபரும் ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள் எனவும் கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவரவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.