Header Ads



வேன் கதவு திறபட்டு, குழந்தை கீழேவிழுந்து வபாத்

(J.M.Hafeez)

கண்டி, இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் பஸ்மியாவின் கைக் குழந்தை வாகன விபத்தில் மரணமடைந்துள்ளது.(1.7.2017 இரவு) இன்னாலில்லாஹி வஹின்னா இலைஹி ராஜிஹூன்

கண்டி, குருந்துகொள்ளயைச் சேர்ந்த பொறியியலாளர் பஸ்மியா, மற்றும் மாத்தலையைச் சேர்ந்த கனணி பொறியியலாளர் பர்சாட் ஆகியோரின் இரண்டு வயதுக் குழந்தையான பஹ்மா என்ற சிறுமியே விபத்தில் மரணடைந்தவராவார்.

(நேற்று) சனிக் கிழமை மாலை மடவளையில் உள்ள தமது உரவினர் ஒருரை சந்தித்து விட்டு கணவனும் மனைவியும் இரு குழந்தைகளும் வத்தேகம வழியாக உத்தியோக பூர்வ வாகனத்தில் மாத்தலை செல்லும் வழியில் வத்தேகமபொலீஸ் பிரதேசத்தில் உள்ள யட்டவரைப் பிதேசத்தில் வைத்து தாம் பயணித்த வேனின் கதவு திற பட்டு குழந்தை கீழே விழுந்து சம்பவ இடத்திலே உயிர் நீத்துள்ளது.

படு காயடைந்த குழந்தையை மாத்தலை வைத்திய சாலைக்கு எடுத்துச்சென்ற போதும் அது பயனளிக்க வில்லை.

மரணித்த குழந்தை குருந்துகொல்லயைச் சேர்ந்த நிஸ்தார் - உம்முகுல்தூம் ஆசிரியத் தம்பதிகளின் பேத்தியாவார். ஜனாசா மரண விசாரணைக்காக மாத்தலை வைத்தியசலையில் வைக்கப்பட்டுள்ளது. ஜனாஸா மாத்தலை எம்.சி.ரோட்டிலுள்ள இல்லத்தில்  இருந்து எடுத்துச் செல்லப்பட்டு மாத்தலை பள்ளியில் நல்லடக்கம் செய்யப்  படும்.

No comments

Powered by Blogger.