Header Ads



இளஞ்­செ­ழி­யனை கொல்லும் திட்டமில்லை, சந்­தே­க­ந­பரின் வாக்குமூலம் இதோ..!


“நல்­லூ­ரில் உள்ள வீட்­டில் தண்­ணி­ய­டிச்­சுட்டு (மது­போதை) அந்­தச் சந்­தி­யில் வந்து நின்­றம். பொலிஸ்­கா­ரன் வரேக்க, உனக்கு தைரி­யம் இருந்தா அவன்ர துவக்கை எடுத்­துச் சுடடா பார்ப்­பம் என்று மச்­சான் சொன்­னான். பொலிஸ்­கா­ரன்ர துவக்கை எடுக்­கேக்க தெரி­யா­மல் சுடு­பட்­டுட்­டு­து”­ இவ்­வாறு நல்­லூர் துப்­பாக்­கிச் சூட்­டுச் சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டை­ய­தாக பொலி­ஸா­ரால் தேடப்­பட்டு வந்த முதன்­மைச் சந்­தே­க­ந­பர், பொலி­ஸில் நேற்­றுச் சர­ண­டைந்து வழங்­கிய வாக்­கு­மூ­லத்­தில் தெரி­வித்­தார்.

சந்­தே­க­ந­பர் யாழ்ப்­பாண நீதி­வான் எஸ்.சதீஸ்­த­ர­னின் உத்­தி­யோ­க­பூர்வ இல்­லத்­தில் நேற்று மாலை முற்­ப­டுத்­தப்­பட்­டார். அவரை எதிர்­வ­ரும் 8ஆம் திகதி வரை­யில் விளக்­க­ம­றி­ய­லில் வைக்க நீதி­வான் உத்­த­ர­விட்­டார்.

நல்­லூ­ரில் கடந்த சனிக்­கி­ழமை மாலை 5.15 மணி­ய­ள­வில் துப்­பாக்­கிச்­சூட்­டுச் சம்­ப­வம் இடம்­பெற்­றி­ருந்­தது. யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்ற நீதி­பதி மா.இளஞ்­செ­ழி­ய­னின் மெய்ப்­பா­து­கா­வ­ல­ரது பிஸ்­டலை பறித்தே துப்­பாக்­கிச்­சூடு நடத்­தப்­பட்­டி­ருந்­தது. தன்னை இலக்கு நோக்­கி­ய­தாக இந்­தச் சம்­ப­வம் இருக்­கக் கூடும் என்று சந்­தே­கிப்­ப­தாக நீதி­பதி மா.இளஞ்­செ­ழி­யன் தெரி­வித்­தி­ருந்­தார். பொலி­ஸார் அதனை மறுத்­தி­ருந்­த­னர்.

சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டைய சந்­தே­கத்­தில் இரு­வர் அன்­றி­ரவே கைது செய்­யப்­பட்­டி­ருந்­த­னர். முக்­கிய சந்­தே­க­ந­ப­ரைத் தேடி வரு­வ­தா­கப் பொலி­ஸார் தெரி­வித்­தி­ருந்­த­னர். அவர் வெளி­மா­வட்­டத்­துக்கு தப்­பிச் சென்­றி­ருந்­த­தா­க­வும், அவ­ரைத் தேடி கிளி­நொச்சி மற்­றும் முல்­லைத்­தீ­வுக்கு சிறப்பு பொலிஸ் குழுக்­கள் சென்­றுள்­ள­தா­க­வும் பொலிஸ் தரப்­புத் தக­வல்­கள் நேற்று முன்­தி­னம் தெரி­வித்­தி­ருந்­த­னர்.

இந்த நிலை­யில் திடீ­ரென – யாருமே எதிர்­பார்க்­காத நிலை­யில், பொலி­ஸா­ரால் தேடப்­பட்ட முதன்­மைச் சந்­தே­க­ந­பர் யாழ்ப்­பா­ணம் பொலிஸ் நிலை­யத்­தில் நேற்­றுக் காலை 8.20 மணி­ய­ள­வில் சர­ண­டைந்­தார். அவ­ரி­டம் நேற்று மாலை 5 மணி­வரை வாக்­கு­மூ­லம் பெறப்­பட்­டது.

“துப்­பாக்­கிச்­சூடு நடத்­திய பின்­னர் பிஸ்­ட­லைக் காட்டி வீதி­யால் வந்­த­வ­ரது ஸ்கூட்­ட­ரைப் பறித்­தேன். ஸ்கூட்­ட­ரில், ஆடி­ய­பா­தம் வீதி கல்­வி­யன்­காட்­டுப் பகு­திக்­குச் சென்று அங்­கி­ருந்து அரி­யா­லைக்­குச் சென்­றேன். அரி­யாலை பேச்சி அம்­மன் கோயி­லுக்­குப் பின்­னால் ஸ்கூட்­ட­ரைப் போட்­டு­விட்டு திரு­ந­கர் பகு­தி­யில் உள்ள பெரி­யம்மா வீட்­டுக்­குச் சென்­றேன். அங்கு பெரி­யம்­மா­வி­டம், போதை­யில் பொலி­ஸூக்கு அடித்­துப்­போட்­டன். பொலிஸ் என்­னைத் தேடுது என்று சொன்­னேன். பெரி­யம்மா வீட்­டி­லேயே உடையை மாற்­றி­விட்டு ஓட்­டு­ம­டம் பகு­தி­யில் உள்ள கோம்­ப­யன்­ம­ணல் சுட­லை­யில் அன்­றைய இர­வைக் கழித்­தேன்.

மறு­நாள் பகல் நாவந்­து­றை­யில் உள்ள உற­வி­னர் வீட்­டில் நின்­றேன். அன்­றி­ரவு கொட்­ட­டி­யில் உள்ள மாமா­வின் வீட்­டுக்­குச் சென்­றேன். நல்­லூ­ரில் நடந்த சம்­ப­வத்தை மாமா அறிந்து வைத்­தி­ருக்க வேண்­டும். ஏனெ­னில், என்னை அங்கு கண்­ட­தும் மாமா உட­ன­டி­யாக எனது அப்­பா­வுக்கு அலை­பேசி அழைப்பை ஏற்­ப­டுத்தி நான் வந்­த­தைக் கூறி­னார். மாமா என்னை பொலி­ஸில் சர­ண­டை­யு­மாறு கூறி­னார். அதன்­படி மாமா­வு­டன் வந்து பொலி­ஸில் சர­ண­டைந்­தேன்” என்று சந்­தே­க­ந­பர் வாக்­கு­மூ­லம் வழங்­கி­ய­தா­கப் பொலிஸ் தரப்­புத் தக­வல்­கள் தெரி­வித்­தன.

வாக்­கு­மூ­லம் பெற்­றுக் கொள்­ளப்­பட்ட பின்­னர், திரு­ந­க­ரில் உள்ள சந்­தே­க­ந­ப­ரின் பெரி­யம்மா வீட்­டுக்கு பொலிஸ் வாக­னத்­தில் கறுப்­புத்­து­ணி­யால் மூடிய நிலை­யில் சந்­தே­க­ந­பர் அழைத்­துச் செல்­லப்­பட்­டார். துப்­பாக்­கிச் சூடு நடத்­தும்­போது அணிந்­தி­ருந்த உடை­கள் உள்­ளிட்ட சில பொருள்­கள் மீட்­கப்­பட்­டன. பின்­னர் அவர் யாழ்ப்­பா­ணம் பொலிஸ் நிலை­யத்­துக்கு அழைத்து வரப்­பட்­டார். அத­னைத் தொடர்ந்து யாழ்ப்­பா­ணம் நீதி­வா­னின் உத்­தி­யோ­க­பூர்வ இல்­லத்­தில் சந்­தே­க­ந­பர் முற்­ப­டுத்­தப்­பட்­டார்.

சந்­தே­க­ந­பர் யார் ?சந்­தே­க­ந­பர், சிவ­ராசா ஜெயந்­தன் (வயது–39). இவர் 1995ஆம் ஆண்­டி­லி­ருந்து 1998ஆம் ஆண்டு வரை­யில் தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் ‘சைபர்’ படை­ய­ணி­யில் இருந்­துள்­ளார். 1998ஆம் ஆண்டு விடு­த­லைப் புலி­கள் அமைப்­பி­லி­ருந்து வில­கு­வ­தற்­கான கடி­தம் கொடுத்­துள்­ளார். அமைப்­பி­லி­ருந்து இடை­யில் வில­கு­வ­தன் கார­ண­மாக விடு­த­லைப் புலி­கள் தண்­டனை கொடுத்­துள்­ள­னர். இர­ணை­மடு முகா­மில் சமை­யல் வேலை செய்­யும் தண்­டனை அவ­ருக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.

2000ஆம் ஆண்டு முழங்­கா­வில் பகு­தி­யில் வசித்­துள்­ளார். முழங்­கா­வி­லில், யாழ்ப்­பா­ணம் மண்­கும்­பா­னைச் சேர்ந்த பெண்ணை திரு­ம­ணம் முடித்­துள்­ளார். இவ­ருக்கு 4 பிள்­ளை­கள் உள்­ள­னர். 2002ஆம் ஆண்டு மண்­கும்­பா­னில் சந்­தே­க­ந­பர் குடும்­பத்­து­டன் குடி­யே­றி­யுள்­ளார். ஆரம்­பத்­தில் கூலி வேலை­கள் செய்­துள்­ளார். பின்­னர் ஐஸ்­ பழ வியா­பா­ரத்­தில் ஈடு­பட்­டுள்­ளார். இதன்­போது வேல­ணை­யில் மற்­றொரு திரு­ம­ணம் செய்­துள்­ளார். இவ­ருக்­கும் 4 பிள்­ளை­கள் பிறந்­துள்­ள­னர். வேலணை 4ஆம் வட்­டா­ரத்­தில் தொடர்ந்து வசித்து வரு­கின்­றார். யாழ்ப்­பா­ணம் – குறி­காட்­டு­வான் பேருந்­துச் சேவை­யில் சார­தி­யாக பணி­யாற்றி வரு­கின்­றார்.

3 comments:

  1. இது ஒரு திட்டம்மிடப்பட்ட சரணடைவும் அலங்கரிக்கப்பட்ட வாக்குமூலமும் வெறியுடனிருந்த ஒருவருக்கு நன்றாக பயிற்சி அடைந்த காவல்துறை அதிகாரியிடமுள்ள துப்பாக்கியை பறித்தெடுப்பது நம்பமுடியாத விடையம்! அவ்வாறு அவர்கூறுவதுபோன்று உண்மையாக வெறியுடன் செயல்பட்டிருந்தகாரணம்தான் அவரால் நீதிபதியை நோக்கி திட்டமாக சுடமுடியாமல் ஆகிவிட்டது'ஆனால் இந்த விடயத்தில் நீதிதுறையில் உண்மையை கூறும் நீதிபதி இளஞ்செலியனே இளக்கு.

    ReplyDelete
  2. தல்லாடும் போதையில் இருந்திருந்தால் இவரால் எப்படி மோட்டார் சைக்கிள் ஓட முடிந்தது? தலைக்கோறிய போதையில் ஒருவர் மோட்டார் சைக்கிள் ஓட்ட முடியுமா? எனவே திட்டமிட்டு தயார் செய்து இவர் பயன்படுத்தப் பட்டுள்ளார்

    ReplyDelete
  3. அப்பாடியானல் போலிஸ்தான் போதையில் உளறியதா!!?,அது சரி நிதானமாக யாருமே இல்லோயே நாட்டில் ஒரு விட யத்தை மறந்து விட்டார்கள் இந்த சம்பவம் ஒரு முஸ்லிம் என்று சந்தேகமாக இருந்துருந்தால் கூட இதுவரையில் எத்தனை கொலைகள்,சொத்துக்கள் நடந்திருக்குமட்டுமல்ல,bbc cnn,bbs இன்னும் எத்தனையோ பேருக்கு அரிப்பெடுத்து iiss என்றும் ஊளையிட்டுப்பார்கள் இதை வைத்துக் பல நக்கு ஊடகங்களும் தலைப்பு செய்தியாக வெளியிட்டு தங்கள் நக்கு விசுவாசத்தை காட்யிருப்பார்கள் பிளான் சரியில்லையே

    ReplyDelete

Powered by Blogger.