Header Ads



கொழும்பிலுள்ள அமெரிக்க, தூதரகத்தின் விளக்கம்


கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள தமது தூதரகத்தை தாக்க ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டி வருவதாக வெளியான செய்திகள் சம்பந்தமாக உத்தியோகபூர்வமாக எந்த அறிக்கையும் கிடைக்கவில்லை என இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

உத்தியோகபூர்வ அறிக்கை எதுவும் கிடைக்காத நிலையில், அது சம்பந்தமாக பதிலளிக்க முடியாது எனவும் தூதரகம் கூறியுள்ளது.

இந்நிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் தமது தூதரகத்தை தாக்க போவதாக எவ்வித தகவல்களும் இதுவரை கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரத்மலானை விமான நிலையத்தில் விமான ஒன்றை கடத்தி கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தை தாக்க ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக ஊடகங்களில் அண்மையில் தகவல்கள் வெளியாகின.

அதேபோல் இப்படியான சம்பவம் தொடர்பில் உத்தியோகபூர்வமான தகவல்கள் எதுவுமில்லை என இலங்கை விமானப்படையினர் கூறியுள்ளனர்.

இலங்கையில் விமான ஓடுத்தளங்கள் இருக்கும் சகல இடங்களும் தீவிர பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ள இடங்கள் எனவும் விமானப்படையினர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.