Header Ads



யோகி ஆதித்யநாத்தின், மூடநம்பிக்கையின் உச்சக்கட்டம்

உத்தரப்பிரதேசத்தில் அத்தி மரங்களை சகுனத்தடையாகக் கருதி அவற்றை அகற்ற உத்தரவிட்டுள்ளார் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்.

உத்தரப்பிரதேசத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் கன்வார் யாத்திரை என்ற புனித யாத்திரை சிவ பக்தர்களால் மேற்கொள்ளப்படும். இந்தாண்டு யாத்திரைக்கான முன்னேற்பாடுகளை யோகி ஆதித்யநாத் தலைமையிலான உ.பி அரசு செய்துவருகிறது.

இந்நிலையில், இந்த யாத்திரையின்போது பின்பற்றப்பட வேண்டிய முறைகள் குறித்து முதல்வர் ஆதித்யநாத் சமீபத்தில் ஒரு அறிக்கை விடுத்தார். இந்த அறிக்கை தான் தற்போது பல சர்ச்சைகளை எழுப்பி வருகிறது. முதல்வர் ஆதித்யநாத் அறிக்கையில், கன்வார் புனித யாத்திரை மேற்கொள்ளப்படும் வழியெங்கும் அதிகளவில் காணப்படும் அத்தி மரங்களை வெட்ட உத்தரவிடப்படப்பட்டுள்ளது. 

’விரதம் இருந்து புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் செல்லும் வழியில் அத்தி மரங்கள் இருப்பது அபசகுணம்’ என்று குறிப்பிட்டு ஆதித்யநாத் இந்த உத்தரவை விதித்துள்ளார். மேலும், யாத்திரையின் போது மோசமான வார்த்தைகள் நிறைந்த பாடல்களையும் கேட்கக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒரு மரத்தை அபசகுணமாக அரசு அறிவித்திருப்பது மூடநம்பிக்கையின் உச்சகட்டம் என சமூக வலைதளங்களில் பலரும் தங்கள் விமர்சனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். பொதுநிலையில் இருக்க வேண்டிய அரசு இவ்வாறு மூடநம்பிக்கைகள் சார்ந்து இருப்பது வேதனை அளிக்கிறது என்றும் இயற்கை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

No comments

Powered by Blogger.