Header Ads



தேவா­லயம் அருகே மஞ்சள் கட­வையில், சோற்றுப் பொதிக்­காக ஒருவர் குத்திக் கொலை

நீர்­கொ­ழும்பு பிர­தான  வீதியில் கத்­தோ­லிக்க தேவா­லயம் அருகில் உள்ள மஞ்சள் கட­வையில் யாசகர் ஒருவர் மற்­றொரு யாச­க­ரினால் கத்­தியால் குத்திக் கொலை செய்­யப்­பட்­டுள்ளார். 

சுமார் 65 வயது மதிக்­கத்­தக்க பத்­ம­நாதன் என அறி­யப்­படும் யாச­கரே இவ்­வாறு குத்திக் கொலை செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் அவரை கொலை  செய்­த­தா­கக் கூறப்­படும் மற்­றொரு யாச­கரை  நீர்­கொ­ழும்பு பொலிஸார் கைது செய்­துள்­ள­தா­கவும் பொலிஸ் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சகர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

 சோற்றுப் பொதி ஒன்­றினைப் பெற்­றுக்­கொள்­வதில் ஏற்­பட்ட வாய்த்­தர்க்கம் இறு­தியில் கத்திக் குத்தில் முடி­வ­டைந்­துள்­ள­தா­கவும் கொலைக்கு பயன்­ப­டுத்­தப்­பட்ட கத்­தியை அருகில் உள்ள வடிகானில் இருந்து பொலிஸார் மீட்­ட­தா­கவும் நீர்­கொ­ழும்பு பொலிஸார் தெரி­வித்­தனர்.

 இந்த கொலை தொடர்பில் மேலும் அறிய முடி­வ­தா­வது,

பத்­ம­நாதன் எனும் யாச­க­ருக்கும் சந்­தேக நப­ருக்கும் இடையே கடந்த மூன்று வரு­டங்­க­ளாக தனிப்­பட்ட பிரச்­சினை ஒன்று இருந்து வந்­துள்­ளது. இந் நிலையில் நேற்று நண்­பகல் 12.35 மணி­ய­ளவில் யாச­கத்தின் இடையே சோற்றுப் பொதி ஒன்று கிடைத்­துள்­ளது. இந்த சோற்றுப் பொதியை மையப்­ப­டுத்தி பத்­ம­நா­த­னுக்கும் சந்­தேக நப­ரான யாச­க­ருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்­பட்­டுள்­ளது. இத­னை­ய­டுத்து சந்­தேக நபர் பத்­ம­நா­தனை துரத்திச் சென்று நீர்கொழும்பு பிர­தான வீதியின் மஞ்சள் கட­வையில் வைத்து பலர் பார்த்­தி­ருக்க கத்­தியால் குத்­தி­யுள்ளார்.

இத­னை­ய­டுத்து படு­கா­ய­ம­டைந்த பத்­ம­நாதன் உட­ன­டி­யாக நீர்­கொ­ழும்பு வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்­லப்­பட்­டுள்ள போதும் அவர் அங்கு சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழந்­துள்ளார்.

சம்­ப­வத்­தை­ய­டுத்து அங்கு போக்கு வரத்து கட­மையில் இருந்த பொலிஸார் உட­ன­டி­யா­கவே கத்­தியால் குத்­திய யாச­கரைக் கைது செய்­துள்­ளனர். குத்­தி­யதும் அந்த கத்­தியை யாசகர் அருகில் உள்ள வடிகானில் வீசிய போதும் பொலிஸார் பின்னர் அதனை மீட்­டுள்­ளனர்.

 சம்­பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் உதயகுமார வுட்லரின் ஆலோசனையின் கீழ் நீர்கொழும்பு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.