Header Ads



கிழக்கு மாகாண சபை, ஆளுநரின் கட்டுப்பாட்டில் வருகிறது

எதிர்வரும் செப்டெம்பர், ஒக்டோபர் மாதங்களில் பதவிக்காலம் முடிவடையவுள்ள கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளின் நிர்வாகம் அடுத்த தேர்தல்வரை ஆளுநர்களின் நிர்வாகத்துக்கு ஒப்படைக்கப்படலாமென அரசின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சகல மாகாண சபைத் தேர்தல்களையும் ஒரே தினத்தில் நடத்துவதென கடந்த வாரம் அமைச்சரவை தீர்மானித்திருப்பதால் இந்த மூன்று மாகாண சபைகளின் நிர்வாகம் ஒக்டோபர் முதல் ஆளுநர்களிடம் ஒப்படைக்கப்படலாம் என அவ்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதேவேளை, மத்திய, வடமேல், வட மாகாண சபைகளின் பதவிக்காலம் 2019 ஒக்டோபரிலும், மேல் மற்றும் தென் மாகாண சபைகளின் பதவிக்காலம் 2019 ஏப்ரலிலும், ஊவா மாகாண சபையின் பதவிக்காலம் 2019 செப்டெம்பரிலும் முடிவடையவுள்ளதால் 2019 ஒக்டோபர் வரை மாகாண சபைகள் அனைத்துக்குமான தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இல்லையெனவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. Tw

No comments

Powered by Blogger.