Header Ads



யாழ்ப்பாண துப்பாக்கிச் சம்பவம் சாதாரணமானதல்ல - மஹிந்த

யாழில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோக சம்பவத்தை சாதாரணமாக எண்ணிவிட முடியாதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே மஹிந்த இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பொலிஸ் அதிகாரிகள் இவ்வாறான துப்பாக்கி பிரயோக அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டால், சாதாரண மக்களின் பாதுகாப்பு எவ்வாறு என்பதனை சிந்தித்து பார்க்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாண துப்பாக்கி பிரயோக சம்பவம் தொடர்பில் பல்வேறு தரப்பினர் பல்வேறு கருத்துக்களை வெளியிடுகின்ற போதிலும் இந்த சம்பவத்தை சாதாரணமாக எண்ணிவிட முடியாதென மஹிந்த மேலும் தெரிவித்துள்ளார்

No comments

Powered by Blogger.