Header Ads



ஐக்கிய தேசியக் கட்சியினால், தனியே அரசாங்கத்தை உருவாக்க முடியும்


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனான கூட்டணி அரசாங்கத்தின் உடன்படிக்கை காலம் முடிந்தாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் ஒன்றை உருவாக்க முடியும் என அந்த கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடந்த கட்சியின் செயற்குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் தற்போதைய கூட்டணி அரசாங்கத்தை பாதுகாக்க ஐக்கிய தேசியக் கட்சி அர்ப்பணிப்புடன் இருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அரசாங்கத்தில் இருப்பதா, இல்லையா என்பதை எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் தீர்மானிக்க முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கூட்டத்தில் கூறியதாக தகவல் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.