அதிவேக வீதியில், மண் நொறுக்கும் இயந்திரத்தை திருடியவர்கள் கைது
மாத்தறை, மத்தள அதிவேக வீதியின் நிர்மாணப் பணி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்ட இரு மண் நொறுக்கும் இயந்திரங்கள் காணாமல்போன சம்பவம் தொடர்பில் இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
நேற்று (27) இரவு தங்கல்ல பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய தங்கல்ல பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர், குறித்த நபர்கள் இருவரையும் கைது செய்துள்ளதோடு, குறித்த மண் நொறுக்கும் இயந்திரத்தை கொண்டு செல்ல பயன்படுத்திய முச்சக்கர வண்டியையும் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த நபர்கள், கடந்த ஞாயிற்றுக்கிழமை (23), வீரகெட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாத்தறை, மத்தள அதிவேக பாதையின் புனரமைப்பு நடவடிக்கைக்காக பயன்படுத்திக் கொண்டிருந்த மண் நொறுக்கும் இயந்திரத்தை களவாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட நபர்கள் 30, 32 வயதுடைய பெதிகம, விநாரந்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்களை இன்றைய தினம் (28) வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும், வீரகெட்டிய பொலிசார் தெரிவித்தனர்.
Post a Comment